திங்கள், 14 ஜூன், 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...!

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/13
Subject: பிரியாத வரமொன்று வேண்டும்...!
To: admin@sivastar.net


உயிரானவளே என்
உறவானவளே
உன்னுள் என்னை
உருவாக்கியவளே

பஞ்சணையில் ததும்பி
பலரசம் கலந்து
பார் மறந்த
பாவையாக்கியவளே...

நான் திகைத்த அமுதம் நீ
நாவூறும் கனிரசமும் நீ
நாளுக்கு நாள் எனைமறந்து
நான் ரசிக்கும் உலகமும் நீ

உன் காதலில் திழைத்து
உலகை மறந்து லயித்த என்னால்
உனைப்பிரியும் வாழ்வு
உணர்வற்ற ஜடமாகுமே....

மடிகின்ற நொடியோ
மாறுகின்ற நிலையோ
குன்றும் வயதோ..
குழி பறிக்கும் விதியோ...

எம் பிணைப்பில்
ஏங்குகின்ற இவைகள்
எக்காலத்தும் பிரித்திடா
ஏற்றம் கொண்டு

வாழ்வோ சாவோ..
வாசமோ துறவோ.
இன்பமோ துன்பமோ
இணைபிரியா நிலைவேண்டும்

நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக