திங்கள், 14 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...!

---------- Forwarded message ----------
From: Best Wishes <best_wishes@ymail.com>
Date: 2010/6/14
Subject: sending a small kavithai..
To: admin@sivastar.net
Cc: sramasamy2002@gmail.com

பிறப்பிலும் அழுகை
இறப்பிலும் அழுகை
வாழ்விலும் இன்பம்
துன்பம் என சுழற்சி
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

எங்கும் சூழ்ச்சி
எதிலும் வீழ்ச்சி
வந்ததும் இனிப்பு
வருவதும் கசப்பு
எனினும் பின்னர்
கசப்பாய் வந்தது
இனிப்பாய் மாறாது
நினைத்தாலே மனது
தானாய் அழுகிறது
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கண்களால் பார்ப்பது மெய்
காதுகளால் கேட்பது மெய்
வாயால் பேசுவது மெய்
கையால் செய்வது மெய்
சிந்தனையும் மெய்யென
வாழ இயலாது வாழ்வு
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

காணும் காட்சிகள் யாவும்
மனித சுயநலம் தாம்
ஒரு முறை இப்பிறவியும்
இங்கு காண்பதே போதும்
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக