புதன், 30 ஜூன், 2010

கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! 014

---------- Forwarded message ----------
From: seenimohamed safeer <rajabasli@gmail.com>
Date: 2010/6/28
Subject: 9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!
To: admin@sivastar.net


இந்த கால கட்டத்தில் எமது மக்கள் எல்லா இடங்களிலும் மூன்று தரப்பினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அச்த வகையில் எமது நிலைகள் பின்வருமாறு வசதி படைத்தவர்கள் என்றும்,நடுத்தர வர்க்கத்தினர் என்றும்,ஏழ்மை நிலையினர் என்றும் வெவ்வேறு தரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வசதி உள்ளவர்களுக்கு பணப்பிரச்சினை என்று ஒரு சிக்கல் வராது உடுப்பதற்கும் உண்பதற்கும் அளவிற்கு அதிகமாகவே இருக்கும்.எந்த வசதியும் இன்றி அன்று உழைப்பதை அன்றே உண்டு வாழும் நிலை ஏழ்மை தரம்.இருந்தால் உண்பது இல்லை என்றால் உறங்குவது என்றே அவர்கள் போய்க்கொண்டிருப்பார்கள்.

ஆனால் மிஞ்சியிருக்கும் இந்த நடுத்தர வர்க்கத்தினர் அந்தப் பக்கமும் இன்றி இந்தப் பக்கமும் இன்றி இரன்டும் கெட்டானாக பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டனர்.இவர்களின் குடும்ப நிலவரம் கலவரமாகவே கடந்து செல்லும்.தினம் திண்டாட்டமாகவும் திருப்தி இல்லாமலும் இவர்கள் குடும்ப நிலவரத்தில் ஒருவரின் ஊதியம் வாழ்க்கைச் செலவிற்கு போதுமானதாக இல்லாததன் காரனமாத்தான் அதிகமான குடும்பத்தில் குடும்பத் தலைவியும் வேலைக்குச் செல்ல வெளியாகின்றனர்.

பெண்கள் வேலைக்குச் செல்வதை சில குடும்பத்தில் முழுமையாக ஆதரித்தும், சில குடும்பத்தில் தன் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அனுமதித்தும் ,சில குடும்பத்தில் முற்றாக எதிர்த்தும் காலம் கடக்கின்றன.மனைவி வேலைக்குப் போவதை இவர்கள் எதிர்பதர்க்குக் காரணம் பல வகையிலான தீமைகள் வருவதனால்த்தான்.ஆனால் முற்றாக தீமைகள்தான் என்றில்லை.சில நன்மைகளும் பல தீமைகளும் உண்டு.

முதலில் நன்மைகளைப் பார்த்தோமானால்..

மனைவி வேலைக்குப் போவதால் குடும்பச் சிக்கல்கள் ஓரளவு நிவர்த்தியாக வாய்ப்பு ஏற்படும்.கணவனுடைய சம்பளத்தை செலவு செய்தாலும் மனைவியின் சம்பளத்தை சேமித்தோ அல்லது வெவ்வேறு தேவைகளுக்கோ பயன் படுத்தலாம்.அத்தோடு குறைவாகப் படித்த ஒரு பெண் வேலைக்குப் போவதால் வேலை செய்யும் இடத்தில் பல பேருடன் பேசிப் பழகவும் தெரியாத சிலவற்றை அறிந்து கொள்ளவும் வழி அமைக்கின்றது.இதனால் தம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வாய்ப்புண்டு.

மனைவி வேலைக்குப் போவதால் தலைமைத்துவப் பங்கு வருவதுடன், பொறுப்புணர்ச்சியும் ஏற்படுகிறது.வேலை செய்யும் இடம் குழந்தை காப்பகமாகவோ அல்லது முதியோர் இல்லமாவோ இருந்தால் குழந்தைகளை கவனிப்பதில் ஆர்வமும்,பெரியோரிட்கு மரியாதை செய்யும் தன்மையும் தானாகவே வந்து விடும்.அத்தோடு மன அமைதியும்,குழப்பக் குறைவும் மறுமைக்கு பலனும் கிடைக்கும்.குழப்பக் குறைவும் மறுமைக்கு பலனும் கிடைக்கும்.மனைவி வேலைக்குச் செல்வதால் இவ்வாறான சில நன்மைகள் இருந்தாலும் பல வழிகளில் வரும் பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.அத்தீமைபக் வரும் வழிகளை ஆராய்வோம்.பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் மனைவிக்கு விடுமுறை என்பது மிகவும் அரிதாகவே கிடைக்கும்.இதனால் தன் கணவனையோ குழந்தையையோ குடும்பத்தையோ சரியான முறையில் கவனிப்பதற்கு முடியாமல் போகும்.இதில் முக்கியமான ஒரு விடயம் தான் பெற்றெடுத்த தன் குழந்தைக்கு ஆறு மாதம் வரையிலாவது முழுமையாக தாய்ப் பால் ஊட்ட முடியாமல் போய்விடும்.இதன் காரணமாக குழந்தைக்கு தாய்ப் பாசம் குறைந்து மூளை வளர்ச்சி குன்றி குழந்தை மனம் பாதிக்கப் படலாம்.

இது மட்டுமல்ல தமது உறவினர்களுடன் பேசிப்பழகவும் நேரமில்லை.குடும்ப அங்கத்தவர்களுடன் சேர்ந்து சாப்பிடும் சந்தர்ப்பமும் மிவும் அரிதாகவே கிடைக்கும்.கணவன் மனைவி வேலைக்குச் செல்பவராயின் கணவனை விட மனைவி சம்பளம் அதிகம் பெறுவாளாயின் இத கணவனிற்கு கௌரவப்பிரச்சினையாகவும் மானப்பிரச்சினையாகவும் இருக்கும்.இத காலப்போக்கில் கணவன் மனைவியிடையே விரிசல் வர வாய்ப்பளிக்கும்.

ஒருபெண் வீட்டில் இருக்கும் வரைதான் அவளிற்கு மரியாதை வேலைக்கு வெளியிறங்கி விட்டலே பல கோணங்களில் பல பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.வேலை செய்யும் இடத்தில் பல ஆண்களுடன் பேசிப் பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் இது கணவனுக்கு பிடிக்காமல் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு பிணக்காக உருவாகி பிரியும் நிலை ஏற்படலாம்.எப்போது ஒரு பெண் சுயமாக உழைத்து கைநிறைய சம்பாதிக்கிறாளோ அப்போதே அவளிற்கு ஒரு ஸ்த்தானம் வந்து விடும்.சொந்தக் காலில் நிற்கிறோம் என்கின்ற தைரியமும் வந்த விடும்.இதனால் சிறு தவறிட்கும் கணவனை குறை சொல்லுதல் பிறர் பேச்சுக்கேளாமை பெருமைத்தனம் உற்றார் உறவினரோடு ஒண்டி நடவாமை ஏற்றத்தாழ்வு என்று பல தீமைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

தான் பெற்றெடுத்த குழந்தையை அதன் பெற்றோர் குழந்தை அருகில் இருந்து அதன் ஒவ்வொரு அசைவையும் அணுவணுவாக ரசிக்க ஆசைப் படுவார்கள் இதுதான் நியதியும்.ஆனால் மனைவி வெளிநாட்டு பணிப்பெண்பாக இருந்தால் இவளின் நிலை மிகவும் பரிதப்பத்பிற்கு உரியது.பிள்ளையைப் பெற்றெடுத்த பாக்கியம் மட்டுமே இவளிற்கு சேரும்.

இப்படி ஒரு துர்ப்பாக்கியம் தேவைதானா?வேலைக்குச் செல்வதால் குழந்தையை மட்டுமல்ல வீட்டையும் கவனிக்க மறந்து விடும்."சுத்தம் சுகம் தரும்" என்பதே நினைவில் இருக்காது.காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக வேலைக்குப் போகவே ஆயத்தம் செய்வார்கள் இந்த அவசரத்தில் வீட்டைக் கவனிக்க நேரம் கிடைப்பதெப்படி வீடு குப்பையான தீமை.இவ்வளவ தீமைகளிற்கு மத்தியில் சில நன்மைகள் இருந்தாலும் அந்த நன்மைகள் சிறந்த முறையில் யாருக்கும் எந்தக் குறையுமின்றி திருப்திப் படுத்தப் படவேண்டும்.ஆனால் இத எவ்வத சந்தர்ப்பத்திலும் சாத்தியம் அளிக்காது அதிலும் பெண்ணால் முடியாத காரியம் .ஆனால் ஆண்கள் அப்படியல்ல "கணவன் உழைப்பிற்கு மனைவி பொறுப்புதாரி" என பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம்.இயற்கையாகவே ஆண்கள் தைரியசாலிகள் பாட்டாளிகள். கணவன் வேலைக்குப் போவதால் அதிக நன்மைகளே உண்டு.தீமைகள் ஓரிரண்டே.குடும்பத்தில் கணவன் வேலைக்குப் போனால்த்தான் மனைவி மக்கள் சந்தோசமாக இருக்க முடியும்.கணவன் வேலைக்குப் போகாமல் வீட்லேயே முடங்கிக் கிடந்தால் அக்கம் பக்கம் அசிங்கமும் குடும்பத்தில் அலங்கோலமும் ஏற்பட்டு விடும்.

வேலைக்கு போவதுதான் ஒரு ஆணுக்கு (கணவனுக்கு)அழகு.அவன் வேலைக்குப்போவதால் குடும்பம் குதுகலாமக அமையும். பெறும்பாலும் சிக்கல்கள் வர சந்தர்ப்பமே கிடைக்காது.தன் நம்பிக்கையும் குடும்பத்தில் பொறுப்புனர்ச்சியும் ஏற்படும்.கணவன் வேலைக்குப் போவதால் சிறு சிறு தேவைகளிற்குக்கும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கத் தேவையில்லை.கணவன் வேலைக்குப் போவதாலும் கை நிறைய சம்பாதிப்பதாலும் மனைவி சந்தோசமாகவும் பெருமையுடனும் இருப்பாள்.கணவன் வேலைக்குப் போவதால் பல நன்மைகள் காணப்பட்ட போதிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன.தினமும் வேலைக்குப் போகும்போது குடும்பத்தில் நடக்கும் அன்றாட சந்தோசங்களில் துக்கங்களில் கலந்த கொள்ள முடியாத சந்தர்ப்பம் ஏற்படும்.இதிலும் கணவன் மனைவிக்கு சிறு குழந்தைகள் இருந்தால் கணவன் வேலைக்குப் போகும் போதும் உறங்கிக் கொண்டிருக்கும் வேலை முடிந்து வரும் போதும் உறங்கிக் கொண்டிருக்கும்.இதனால் இக் குழந்தையுடன் ஆசை தீர பேசவும் முடியாமல் விளையாடவும் முடியாமல் குழந்தையின் மனதைப் பற்றியும் செயலைப் பற்றியும் புரியாமலும் அறியாமலும் போய்விடும்.திருமணம் முடித்து சில நாட்கள் சென்றதும் தொலைவில் வேலைக்குச் செல்லும் கணவனது நிலை பரிதாபத்துக்குரியதாகும்.கணவன் மனைவியினது ஆசாபாசங்கள் புதைக்கப் பட்டுவிடும்.

அவர்கள் நினைத்த வாழ்க்கை நடாத்த முடியாது. நினைத்த நேரம் நினைத்த விடயங்களிற்கெல்லாம் வீட்டில் இருக்க முடியாது.

வெளிநாடுகளிற்கு வேலைக்குச் செல்லும் கணவனாக இருந்தால் தமது குடும்பத்தில் ஒருவருக்கு சுகமில்லை என்றால் உடனே வர முடியாத துர்ப்பாக்கியமான சூழ்நிலை அவர்களிற்கு ஏற்படுகிறது.இவ்வளவு ஏன் தன் தாயோ அல்லது மனைவியோ சொத்தான குழந்தையோ மரணித்தால் மரணித்த முகத்தையும் பார்க்க சந்தர்ப்பம் கிட்டாமல் போய்விடும்.இப்படியான தீமைகள் ஏற்படுகின்றன.கஸ்டங்களிற்காக கணவன் வேலைக்குப் போனாலும் நிம்மதிக்காக மனைவி வீட்டில் இருப்பது சிறந்தது.

எஸ்.எம்.சபீர்

தோஹா கத்தார்



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

திங்கள், 28 ஜூன், 2010

ஈழம் என்று மலரும்? கவிதைப்போட்டி எண் 060

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/29
Subject: ஈழம் என்று மலரும்?(போட்டிக்கவிதை)
To: admin@sivastar.net


ஈழம் மலரும்,
என்ற ஏக்கம்,
மனதுக்குள் இருக்கு.

ஈழம் மலரும்
என்ற கொள்கைகள்,
உணர்வாக, உயிரோடு கலந்திருக்கு.

ஈழமே எங்கள்
லட்சியம்,இதில்
என்ன அலட்சியம் என்ற
எண்ணமிருக்கு.

ஈழமே பார்வையாக,
உணவாக,மூச்சாக,
முகவரியாக, மாறிருக்கு.

காலங்கள் போகலாம் ,
ஈழம் தோன்றுவது மாறாது.
இழப்புக்கள் தோன்றலாம்,
எங்கள் இருமார்ப்பு மாறாது.

காயங்கள் தோன்றலாம்,
எங்கள் காத்திருப்பு வீணாகாது.
வீரர்கள் சிந்திய மண்ணில்
ஈழம் ,எங்கள் அவலத்தை போக்கும்
ஈழத்தில் புன்னகை பூக்கும் !
இது நடக்கும் !


கலைநிலா .....

ஈகரை களஞ்சியம்.
தமிழர்கள் உலகம்.


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

தொலைதூரக் காதல்! 059

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/29
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net


மழையே எனக்கு கருவானது,
மழையே என் கவிதையானது,
மனதை துரத்தும் நிலையானது!
மனம் விரும்பும், தொலைதூரக் காதலானது!

மண்ணுக்கும் மணக்கும் மலரானது,
விதைக்கும், விதைக்கு உயிரானது,
எனக்கு உறவானது,
என் தொலைதூரக் காதலானது!

சிறு துளியே,சிலிர்க்கும்,
மனதை மயக்கும்,
நனைந்தால் ,புது
இன்பத்தை கொடுக்கும்,
இந்த மழையோ
மலைக்குள், அருவியாய் பிறக்கும்.
எனக்குள், இருக்கும் உணர்வுக்கு,
தொலைதூரக் காதலாய் இருக்கும்.


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

தமிழுக்கும் அமுதென்று பேர்...! 058

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: தமிழுக்கு அமுதென்று பேர்...!
To: admin@sivastar.net


தமிழுக்கு அமுதென்று பேர்...!

இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

பெண்ணுக்குள் பூகம்பம்...! 057

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: பெண்ணுக்குள் பூகம்பம்...!(பெண்ணே நீ பேதையோ குங்குமம் தான் உன் குறியீடோ)
To: admin@sivastar.net


பெண்ணுக்குள் பூகம்பம்...!


இலட்சணமே உன் குங்குமமோ
உன் இலட்சியமே என்னவோ??
குங்குமம் இட்டதால்
குனலந்ததோ உன் இலட்சியம்_இல்னல
குடும்பம் ஆனதால் கூண்டில் இட்டாயோ

உன் இலட்சியத்னத
உன் இலட்சியதினை நனவாக்க
பெண்ணே உன் கூண்னட விட்டு
வெளியே வா.........

சுதந்திரமாய் நீ சுவாசிக்க
சுற்றம் என்ன சொல்லும்
என்று தான் எண்ணினாயோ
எள்ளி நகையாடும் என்றும் தான்

இவ்வுலகம்.........
இவர்களெல்லாம் வேண்டாம்
இலட்சிய பெண்ணே உனக்கு
இலட்சியத்துடன் வா வெளியே
இலட்சியங்கள் உன் குறயீடாகட்டும்!!!!!!!!




--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 056

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!


ஆண் பிறந்தால் உசத்தி
பெண் பிறந்தால் தாழ்த்தி என்று
உன்னை கருவினிலும் சிசுவினிலும்
கொன்றுவிடும்

ஆணும் பெண்ணும் சமமென்று
ஏட்டளவில் எழுதிவைத்து - அதை
ஏட்டுக்கனியாய் நினைத்து
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மறுத்து
திறமைக்கேத்த பதவியை தடுத்து உன்னை
சீண்டுவதில் சிற்றின்பம் காணும்
பெண்டாள நினைக்கும் சண்டாளராய்
இருக்குதடி ஒரு கூட்டம்

மாலையிட்டு தாலிக்கட்டி
வேலி என்று ஆனவன்
குடி பீடி லேடி என்று
பொறுப்பற்று தடம் மாறி போக
வெறுப்புற்று நீயும் அவனை
தட்டி கேட்க துணியும்போது
உன்னை எட்டி உதைத்து
மகிழும் வஞ்சகனாய்
இருக்குதடி ஒரு கூட்டம்

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
நீ அழுதால் நான் அழுவேன் என்று
காதல் மந்திரத்தை உன் காதிலே
தந்திரமாய் ஓதி - உன்னை தன்
இளமை பசிக்கு விருந்தாக்கி பின்
பறந்து செல்லும் பருந்தாக
இருக்குதடி ஒரு கூட்டம்

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா?




--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

பிரியாத வரமொன்று வேண்டும்...! 055

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: பிரியாத வரமொன்று வேண்டும்...!
To: admin@sivastar.net


பிரியாத வரமொன்று வேண்டும்...!

காதலென்ன சாதலென்ன
இரண்டும் ஒன்று தான்
கனிந்தவுடன் வெட்டப்படும்
வாழைக் கன்று தான்

பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே
பிரிந்து கூடிப் பழகிப் பிரிய
மனசு வலிக்குமே

கோர்வையாக வழிந்த
கண்ணீர் கோர்த்திருக்கின்றேன்
கோலமயில் இரத்தினமே
மாலையாக்கிக்கோ



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

தொலைதூரக் காதல்! 054

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net


தொலைதூரக் காதல்!


காலத்தின் வேகத்தால்
காணாமல் போன காதலை எண்ணி
காலன் அவன் மகிழ்வுற்றானோ
நானறியேன்...
இருப்பினும் நான்
தொலைவில் இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன் அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில் என்றோ சேர்த்ததால்
இன்றும் நேசிக்கிறேன் இதமாகவே............



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 053

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!
To: admin@sivastar.net


சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!


நீ நேற்றடித்த நெற்றியடியெல்லாம்
அவன் நெஞ்சினில் இருக்கடா அச்சமாய்
ஆனாலும்
அவனுக்குப்பின்பலம் வெளிநாடடா
நீ
அஞ்சிடா நிமிர்ந்து நில்லடா.
உன்பலம் உன் நெஞ்சடா.
விஞ்சிடா வீரத்தோடு நிமிர்ந்திடடா
விண்ணையும் எட்டுவோம் விரைந்திடடா
விடியும் காலம் விரைவிலடா
வெல்வோம் நாளை தாய் மண்ணையடா
புறப்படு தமிழா புறப்படு...........



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 052

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/28
Subject: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!( போட்டிக்கவிதை ..)
To: admin@sivastar.net


ஈழம்!
இறந்தவர்களின் கனவு,
இரத்தத்தை,உறவுகளின்
உயிர்களை,இழந்தவர்களின்,
உணர்வானது!

தோல்வியே ,கருவாகி
களம் காண வழியானது,
மானத்தை காக்கும்
கவசமாகியது!

வரும் சுதந்திரம்,கிடைக்கும்
அதிகாரம்,என்று மண்ணுக்குள்
புதைந்த விதைகள், மரமாகும்,
மீண்டும் மலரும் ஈழம்.

நகைக்கும் கூட்டமே!
வரலாறு பாருங்கள்!
சுதந்திரப் போராட்டம்,
எல்லாம் உடனே கிடைக்கவில்லை,
கிடைத்ததில்லை!

ஆதிக்கவெறியர்கள் எல்லாம்,
அழிந்தததை இந்திய
வரலாறு சொல்லும்,
1947 ஆண்டை பார்த்தால்
விடை தெரியும்!
நம்பிக்கைக்கொள்ளும்!

நம்பிக்கையே வாழ்க்கை.
நாளை மலரும் ஈழம் என்பதை,
நாளும் எண்ணும் மனதை,
மறக்கமாட்டோம்,
ஈழத்தில்,சுதந்திர
தமிழ்க் காற்றில் எங்கள்
சுவாசம், சுவாசிக்காமல் விடமாட்டோம்!

உறுதியான உயில் இது
உயிராகி,உரமாகி போனது.
உயிர் போனாலும் ,
உறவுக்கு, ஈழம் கிடைக்கும்,
கிடைக்க புது தலைமை பிறக்கும்!
வலிகள் போக்க,வழிகள்,
கிடைக்கும் ,புது இல்லம் கிடைக்கும்
ஈழத்தில் சுவாசிக்கும்.


கலைநிலா !

ஈகரைத் தாய்...! 051

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/28
Subject: ஈகரைத் தாய்...!(போட்டிக்கவிதை)
To: admin@sivastar.net



என் முகவரியே !
ஈகரை என் கரையானது.
என் கவிதைக்கு தாயானது!

நான் பார்க்கும் காட்சிக்கு,
கருவானது, எழுத களமானது!
ஈகரை எனக்கு நட்பானது!

நட்பை தரும் பாலமானது.
நட்புக்கு பலமானது.
ஈகரை எனக்கு உறவானது.

நடப்பதை,நடந்தை சொல்லும்,
நிலையானது,நான் படிக்க,
படைக்க,ஊக்கமானது!

இணையத்தில் இது தனி
இடமானது,இதுக்கு இதயங்கள்
தந்த,தருகின்ற ஆதரவானது,
புரட்சிக்கு வழிப் பார்க்கும்
நிலைக்கு தயாராகுது,
இந்த ஈகரை நம் அனைவருக்கும்,
ஈகரைத் தாயாக மாறியது
உண்மையாகுது!


கலைநிலா........

இனி ஒரு பிறவி வேண்டாம்...! 050

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/28
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
To: admin@sivastar.net


மனிதனாக பிறந்து,
மரத்தை இழந்து
மழையை இழந்து,
உலகத்தை மாசுபடுத்தும்,
நிலையில் நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்,
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

தீவிரவாதத்தில்,தீவிர வாதத்தில்,
இருந்து ,மனிதனே, மனிதன் கொல்லும்
நிலை அறிந்தும், தடுக்க நிலை அறியாமல்,
வேதனையில் நான்,மீண்டும் எனக்கு
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?என்று !


கலை நிலா !


ஞாயிறு, 27 ஜூன், 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...! 049

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/28
Subject: கவிதைப் போட்டி
To: admin@sivastar.net





அதோ பார்; எல்லோரும் நடந்து
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!

உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரணங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!

உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக் கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!

உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் -
வாழ விதித்த; விதி எனலாம்!

உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி -
மௌன சோகம் கொள்ளலாம்!

உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!

உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!

நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!

நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் -
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!

உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!!

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 048

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/28
Subject: கவிதைப் போட்டி
To: admin@sivastar.net



கோழையே...........
கொன்றது நீ வெல்வது நாம்
எம் மௌனம் வானத்தை இடித்து
மின்னலாய் வந்து விழும். அப்போ
உன் தலை தெறிக்கும்.
புலி உயிர்த்தஞ்சம் கேட்டதில்லை
சாவுக்குப் பயந்ததில்லை
யாருக்கும் அடிமையில்லை
பகையென்றால் விடுவதில்லை
மண்டியிட்டால் தொடுவதில்லை
குழிபறித்தால் மன்னிப்புக்கு இடமில்லை
கூடவே இருந்துவிட்டால்
யாருக்குமே அச்சமில்லை.

உன் நெஞ்சுக்கு துணிவிருந்தால்
நேருக்குநேர் நின்றுபார்.
உயிர்தப்பி ஓடினோர் எத்தனை பேர்
அவர்களை கேட்டுப்பார்.
யாரடா நீ எனக்கு வேலிபோட
ஏனிந்த மௌனமென பொறுத்திருந்துபார்
நாளைக்கு நீ எம் எல்லையில் காவல்நிற்பாய்.

புலிக்கொடி வானில் பறந்து
வான்முகிலை அதட்டிப்பேசும்
இடிமின்னலும் அடங்கிப்போகும்
நாம் காத்திருப்பது காலத்தின் பிச்சைக்காகவல்ல.
எம் தலைவனின் வார்த்தைக்காக. அவன்
வார்த்தை எம் சுதந்திரத்தின் திறவுகோல்
அதுவரை நாம் ஓய்வதுமில்லை சோர்வதுமில்லை.
இது தமிழ்த்தாய் மண்மீது உறுதி.

ஈழம் என்று மலரும்? 047

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/28
Subject: கவிதைப் போட்டி
To: admin@sivastar.net


வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்



வெள்ளி, 25 ஜூன், 2010

இனியொரு பிறவி வேண்டாம். 046

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in



இனியொரு பிறவி வேண்டாம்.

வீட்டில் வறுமை
நாட்டில் வறுமை!
வறுமையின் வரவால்
வந்தது பகைமை!

பணத்தின் உதவியோடு
சில இன்பத்தை ரசித்து
பல தொல்லைகளைத்
தாங்கிக் கொண்டும் சகித்துக் கொண்டும்
வாழும் பிணங்கள் பூமியடா இது!

போலியான சிரிப்பு
கேலியான பேச்சு பேசி
ஆளை மயக்கி - ஆழமான
ஆணியை இறக்கும்
நாய்கள் ஓலமிடும் சுடுகாடடா இது!

உயிறை உறிஞ்சி உள்ளே
வைத்துக் கொண்டு - பண்பு
பயிரை வளர்க்கப் பாடுபடுவதாய்
கூறும் வேட்டை நாய்களின்
விளையாட்டு மைதானமடா இது!

சிந்திய ரத்தத்தின்
சில துளியையும்
நக்கி திங்க நாயாய் அலையும்
நயவஞ்சக கூட்டமடா இது!

தட்டிக் கொடுத்தும்
தடைப் போட்டும் - பலவித
நாடகங்கள் அறங்கேறும்
அழுக்குப் படிந்த
நாடக மேடை தான் இந்த பூமி!

இதில் இனியொரு பிறவி வேண்டாமடா சாமி!

தமிழுக்கும் அமுதென்று பேர்...! 045

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in




தமிழுக்கும் அமுதென்று பேர்.

கவிஞரின் எழுத்தோவியமே!
கலைஞர்கள் பேசும் செவ்வாய்மொழியே!
செவி குளிரவைக்கும் பாட்டே!
செம்மொழியாம் தமிழ் மொழி நீயே!

தவம் புரிந்து பெற்ற தாய்மொழியே!-நிண்
தரிசனம் யான் பெற்ற பேரே!
நாவில் இனிக்கும் தேனே!
நன்மக்களின் நாவில் உதிக்கும் கூற்றே!

பருக பருக திகட்டாத- பேரின்பமே!
பண்பட்ட புலவர் புணையும் கவியே!
மொழியின் தாகம் தணிக்கும் அமுதே!
முக்கனி சுவை தரும் தமிழே!

யாம் பெற்ற இன்பம் - இவ்வுலகில்
யாவரும் பெற்றது எம் பாக்கியமே!
ரத்தத்தில் ஊறிய உணர்வே!-தமிழன்
ரசனை கொண்ட எழுத்தே!

அமுதசுவை அறிந்ததில்லை!-நாங்கள்
என் தாய் மொழியாம் தமிழ் சுவை சுவைக்கயிலே!


அடங்கி வாழும் பெண்ணின் ஆர்பரிக்கும் ஆண்குணம்! 044

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in



பெண்ணாய் பிறந்தது பெரும் பாவம்
ஏ! பிரம்மாவே !
நீ மட்டும் ஏன் ஆணாய் பிறந்தாய்!

நீ பெண்ணாய் பிறந்திருந்தால்
படைக்கும் தொழிலில்
பெண்ணினமே இல்லாமல்
வேறோடு அழித்திருப்பாய்!

பெண்கள் வீட்டு அடுப்பினில்
எரியும் விறகு கட்டைகள் - இங்கே
விறகாய், கனலாய், கரியாய்
இருந்துப் பயன் கொடுத்தாலும்
சாம்பலாய் ஆனவுடன் சகதியில்
எரிந்துவிடும் இந்த சமூதாயம்!

பொறுப்புகள் சுமக்க நேர்ந்தால்
பெண்மையைப் பாரமென நினைத்து
பொசுக்கி சாம்பல் ஆக்கிவிடும்
இந்த சமூதாயம்!

அடி உதை வாங்கிய
காலத்தில் கூட -இந்த
பெண் மனம் கலங்கியதில்லை!

அதை விட கொடிய வார்த்தை- என்னும்
ஈட்டியால் குத்தி நெஞ்சைப்
பிளப்பது வலிக்கத்தான் செய்கிறது!

அடங்கி நடக்கும் அடிமைகள்-நாங்கள்
எழுந்தால் கொப்பளிக்கும்
சுடுநீர் கடல் கூட எங்கள்
முன் சிதைந்து விடும்!

பெண்ணுக்குள் பூகம்பம்..! 043

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in


ஐம்பது பவுன் நகையும்
ஐந்து லட்சமும் கொடுத்து
ஊருக்கெல்லாம் சோறு போட்டு!

இருபத்தைந்து வயது வாலிபரை
விலைக்கு வாங்கி- அவனுக்கும்
அவன் குடும்பத்துக்கும் சேவைசெய்யும்
பெண்ணுக்கு மணவாழ்க்கை

இப்படிதான்! -அவனுக்கோ
சம்பளமில்லா சமையல்காரி
கிடைத்துவிட்ட சந்தோசம்!

வீட்டு வேலைகளை அவள்
தலையில் ஒப்படைத்துவிட்டு
வீராப்பு பேசும் வீணர்கள் கூட்டம்!

இவளுக்கு மந்திரம் சொல்லும்
மாயக்காரி என்ற பெயரும் உண்டு!

பிறந்ததிலிருந்து படும் துன்பம்
தான் எத்தனை எத்தனை!

ஆராய்ந்து பார்க்காமல் செய்யும்-இந்த
செயலால் தூக்கத்தில் ஏக்கத்தைச்
சுமக்கும் இளம் பெண்களின்
உள்ளத்தில் தினம் தினம்
பூகம்பம் வெடித்து கொண்டே
தான் இருக்கிறது!

ஈகரைத் தாய்...!042

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in


வாயையும் கட்டுவாள்
வயிறையும் கட்டுவாள்
வறுமையால் அல்ல!

எட்டி உதைத்தாலும்
கட்டி அணைப்பாள்
கணவனையும் அல்ல!

தான் உண்ணாமல்
தன் இனத்திற்கு உணவளிப்பாள்
சுற்றி திரியும் காகமும் அல்ல!

மலர்ந்த முகம் கண்டு
தன் பசி மறந்திடுவாள்
பசிக்காமையால் அல்ல!

துன்பம் கண்டாள்
மருந்தாக மாறுவாள்
மருத்துவரும் அல்ல!

பார்த்து பார்த்து சமைத்து
பக்குவமாய் ஊட்டுவாள்
சமையல்காரியும் அல்ல!

துன்பத்தில் விழுதாய்
இன்பத்தில் கடலாய்!
பொறுமையில் பூமா தேவியாய்

பாசத்தில் அமுதாய்!
அன்பில் ஆகாயமாய்
ஆன்மீகத்தில் தெய்வமாய்

அள்ளி கொடுப்பதில்
அட்சயப் பாத்திரமாய்!
நோயில் மருந்தாய்

கண்ணின் இமையாய்!
திகட்டாத இனிப்பாய்
தித்திக்கும் சுவையாய்!

மங்காத மாணிக்கமாய்
இருப்பவள் தாய் ஒருவளே!


தொலைதூரக் காதல்....! 041

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in


உன் மீது ஏக்கம் அத்தானே, நீ எனக்கும்

நீ இல்லாது ஏது தூக்கம்! அம்மா தானே!

விழியிலே நீயிருக்க உனக்காக மட்டும் தான்

நெஞ்சிலே நாமிருக்க நான் வாழ்கிறேனே!

வழியிலே விழியிருக்க - உன் இப்படிக்கு

வரவைத் தேடி வாசலிலே உங்கள் அன்பு காதலி.

என் கயல்விழி காத்திருக்க!

காணாது கண்ட - உன்

காதல் தான் எனை அணைக்க!

நான் கண்ட உன்

விழிகள் என் நினைவிலிருக்க

இதய கோவிலில் நீ வீற்றிருக்க!

சொந்தம் பந்தம் பார்த்திருக்க

வெட்கத்தால் என்

முகம் சிவந்திருக்க!

உன் முகமோ - எனை

காணாது வாடியிருக்க!

வந்தாயடா நீ என்- மடிமீது!..

தாலாட்ட நான் இருக்கிறேன்- எனை

சீராட்ட நீயிருக்கிறாய்!

உனையடைய நான் என்ன

பாக்கியம் செய்தேனோ!

நீ என் நிஜமாயிருக்க

நினைவாயிருக்க

கனவாயிருக்க - என்

கண்ணிலும் நீயிருக்க!

காதலாய் வந்து

கல்யாணம் செய்து

நாமாய் வாழ்ந்து

நமக்காய்ப் பெற்று

ஆசை தீர அள்ளி முகர்ந்த்தோம்!

பிரியாத வரமொன்று வேண்டும்...! 040

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in




பிரியாத வரமொன்று வேண்டும்.

அத்தானே! ஆசை முத்தானவனே!

அழகு உனக்குள் - என்

ஆயிரம் சொத்தானவனே!

அன்பென்னும் ஆயுதத்தால்

அடிமையாக்கியவனே!

அந்த நிலவில் விளைந்த

ஆகாயத்து நட்சத்திரனே!

அந்திமழை மேகம் ஆடிவர

ஆசை தீர அணைத்தவனே!

ஆகாய தாமரை தேனை

அன்பின் வழி அருந்தியவனே!

அலைஅலையாய் - எனில்

அன்பு மழை பொழிந்தவனே!

ஆயுள் முழுவதும் உன்

அன்பை என்னிடம் ம்ட்டும்

அள்ளி தருபவனே!

ஆசையாய் உனை வந்து

அணைத்து கொண்டேன்!

உறங்கினேன்................!

விடிந்தது?

கண்டது கனவு

அல்ல நிஜம்!


- என்றும் உனை பிரியாத வரம் வேண்டும்!

ஈழம் என்று மலரும்? 039

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in



ஈழம் என்று மலரும்

எண்ணங்கள் ஆயிரம்

ஏக்கத்துடன் காத்திருக்கின்றன நீ மலர!............

மனங்கள் மாறலாம்

மதங்கள் மாறுமா?

இடங்கள் மாறலாம்

இனங்கள் மாறுமா?

காலங்கள் மாறலாம்

கலவரங்கள் மாறுமா?

சாஸ்திரங்கள் மாறலாம்

சாதிகள் மாறுமா?

உணர்ச்சி என்ற பேயும்

உறங்க போவதில்லை!

சாமி மறைந்தாலும்

சாதி மறைவதில்லை!

எத்தனை எத்தனை

ரத்தத்தை ருசி பார்க்கும் இந்த பூமி!

எத்தனை எத்தனை

உயிர்களைப் பழிவாங்கும் இந்த பூமி!

பூமி மாறுமோ

வெறி தான் தீருமோ?

என்ன சொல்ல நான்

விதி ஆடும் ஆட்டத்தை!

கடவுள் இல்லையோ?

கருணை இல்லையோ?

கண்ணின் மணிகளைக்

காக்கவில்லையோ?

அன்பு என்னும் அம்பு

அதையும் தூக்கிக் கொள்ளு

உண்மை நிலையை எடுத்து

உலகை நீயும் வெல்லு!

எண்ணங்கள் ஆயிரம்

ஏக்கத்துடன் காத்திருக்கின்றன நீ மலர!

வியாழன், 24 ஜூன், 2010

தமிழுக்கு அமுதென்று பேர் ! 038

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/24
Subject: கவிதைப் போட்டி: தமிழுக்கு அமுதென்று பேர்
To: eegaraipoem <admin@sivastar.net>


முக்கனியொடு
தேனென
நாவினில்
இனிக்கிறாய்
நற்றமிழே !

முத்தெனும்
முத்தமிழும்
வள்ளுவன்
முப்பாலும்
வழங்கிய நின்
கொடையே !

தாய்ப்பாலொடு
கூட்டியே
ஊட்டினள்
அன்னை அன்பில்
தமிழெனும்
அமுதும் !

உனை
வாழ்த்திட நல்
வார்த்தைகள்
கோர்த்து நின்
பாதங்கள்
சேர்க்கிறேன் !

முகிற்தனில்
மதியாய் நின்
முகம்தரு ஒளியே
அந்நியம் அழிக்கிறேன்
புண்ணியம் சேர்க்கிறேன்
உன்னிசை பாடியே !

நின்
வதனமதில்
கூடிய
வளமெலாம்
வாழ கோடி
வாழ்த்துவம்
உலகெலாம்
உயிர்த்தமிழ்
உணர்த்துவம் !

- நியாஸ்

புதன், 23 ஜூன், 2010

சுவாசிப்போமா சுதந்திர மூச்சு- ஈழம் 037

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in





ஓடி திரிந்தோம் பாடி ரசித்தோம்!

ஒய்யாரமாய் வாழ்ந்தோம்!

இயற்கை அழகை கண்டு இன்புற்றோம்!

இடி மழையில் ஆடி பாடினோம்!

மலை உச்சியில் மேக கூட்டம்

ஊதி விளையாடினோம்!

உற்றார் உறவினருடன் உண்டு மகிழ்ந்தோம்!

கடவுளே கைவிட்டார் போல்

கானல் நீராய் வாழ்க்கையைத் தொலைத்தோம்!

குண்டு மழையில் குளித்தோம்!

ரத்தச் சகதியில் நனைந்தோம்!

முகம் பொத்தி இருட்டில் அலைந்தோம்!

விடியாத வானத்தை எட்டி ஏமாந்தோம்!

நிலா ஒளியில் உறவைத் தேடினோம்!

நிற்கதியில்லா வாழ்வைக் கண்டோம்!

ஒளியில்லா முகம் கண்டு வாடினோம்!

தேதியில்லா தினங்களைக் கழித்தோம்!

பசிக்கும் குழந்தை முகம் பார்த்து பதறினோம்!

வழியில்லா வாழ்க்கையைத் தேடினோம்!

யுகங்கள் கழித்து வாழ்கிறோம்!

சுவாசிக்க சுதந்திர மூச்சு தேடி நிற்கிறோம்!





பெயர் : காயத்ரி

வேலை: ஜுனியர் அசோஸியேட்.

ஆரோஸியண்ட் அவுட் ஸோர்சிங்க் லிமிடெட்

நம்பர் 3, சம்பந்தமூர்த்தி தெரு,

மதுரை- 625001

கைபேசி: 9092335907

பிரியாத வரம் வேன்டும்..! 036

---------- Forwarded message ----------
From: sumaiy suamiy <sumaiye@gmail.com>
Date: 2010/6/24
Subject: kavidhai
To: admin@sivastar.net


பிரியாத வரம் வேன்டும்

நிலாவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் அழகை இழப்பேன் [வானம் ]

தென்றலே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் நறுமணத்தை இழப்பேன் [பூ ]

கனவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் கண்களை இழப்பேன் [கண் ]

மழையே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -வானத்தில் பிரவேசிக்க மாட்டேன் [மேகம் ]

காதலே பிரியாதே
உன்னை பிரிந்தால் -நான் பூமியில் பிரவேசிக்க மாட்டேன் [காதலன்]



பிரியாத வரமொன்று வேண்டும்...! 035

---------- Forwarded message ----------
From: manubarathan mani <manubarathan@gmail.com>
Date: 2010/6/24
Subject: பிரியாத வரமொன்று வேண்டும்...!
To: admin@sivastar.net


அன்புடன்
தேடுகிறேன்
இன்னொரு
பிறவியிலேயும்
என்னை
நீயே
பெற்றெடுக்க
வேண்டுகிறேன்
எத்தனை தவறுகள்
எத்தனை ஏச்சுக்கள்
என்னால் உனக்கு
காலம் கடந்து
நான்
வந்தேன்
அங்கும் இங்கும்
நான்
ஓடியும்
திரிந்த பொழுதுகள்
தொட்டு
கண்ணுக்குள்
காவல் காத்த
என் தாயே
எனக்காக
கடவுளிடம்
வேண்டுவது
உன்னை மட்டுமே
என் பிறவிகள்
முழுதும் நீயே
பெற வேண்டும்
நான் உன் மகன் என்பதில்
பெருமிதம் மட்டுமே
வருகிறது
தவமாய் இருந்தாயம்
என்னை பெற
நானும் தவம் இருக்கிறேன்
நீயே என் தாயாக
வர...!!
வரம் தருவாயா..!!!
--
இரா.மணிவண்ணன்
+91 8056269145

தியானமும் யோகமும்! 016

---------- Forwarded message ----------
From: Nagarajan rajan <manonaga@gmail.com>
Date: 2010/6/24
Subject: கட்டுரை போட்டி
To: admin@sivastar.net
கட்டுரைப்போட்டி எண் 016

தியானமும் யோகமும்

தியானம், யோகம் பற்றி மக்களிடையே நிலவும் பரவலான கருத்து

நம்மில் பெரும்பாலானோர் தியானம் என்பது ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கைகளை நீட்டி கால்களை மடக்கி எதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து, ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிப்பது என்று நினைக்கிறார்கள். மேலும் யோகா என்றால் உடலை வளைத்து நெளித்து செய்யும் உடற்பயிற்சி என்றும், இதை செய்வதன் மூலம் குடும்பம் மற்றும் உயர் அதிகாரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும், சில நோய்நொடியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும், ஆயுள் அதிகரிக்கும் என்றும், நீரில் நடக்கவும், காற்றில் மிதக்கவும் மற்றும் சுகபோக வாழ்க்கை வாழவும் சக்தி கிடைக்கும் என்றும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து.

தியானம் மற்றும் யோகம் என்பதன் பொருள்

தியானம் என்றால் மனதை குவிப்பது என்பது உண்மை ஆனால் எதன் மீது அல்லது யார் மீது குவிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். யோகா என்ற சொல் யுஜ்(ஒன்றிணை) என்ற சொல்லிலிருந்து உருவானது, அதாவது ஒன்றிணைத்தல் என்று பொருள். எதை, எதனுடன் ஒன்றிணைப்பது என்பதை தெரிந்து கொள்ள வேன்டும்.

யோகாவின் அடிப்படை நோக்கம்

எந்த ஒரு செயல்முறைக்கும் ஒரு நோக்கம் உண்டு. அதன்படி யோகாவின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம். அதற்கு முன் சற்று அடிப்படை உண்மையை தெரிந்து கொள்வோம். 'நான்' என்ற சொல் எதை குறிக்கிறது? பொதுவாக, என் கை, என் கால், என் வாய், என் உடல் என்று சொல்லி கேள்விபட்டிருக்கிறோம். யாராவது நான் கை, நான் கால், நான் வாய், நான் உடல் என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டா? இல்லை. பிறகு இந்த 'நான்' என்ற சொல் யாரை குறிக்கிறது? யாரிடம் கேட்பது? எங்கே தேடுவது? என்று ஒரே குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். நமக்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில்(ப.கீ) இதை பற்றி தெளிவாக சொல்லியுள்ளார்.

(ப.கீ_2.17)

அவினாஷி து தத் வித்தி யேன சர்வமிதம் ததம்

வினாஷம் அவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித் கர்துமர்ஹதி


பொருள்:

உடல் முழுவதும் வியாபித்துள்ள ஆன்மா அழிவற்றவன். ஆன்மாவை யாராலும் அழிக்க முடியாது.

(ப.கீ_2.20)

ந ஜாயதே ம்ரியதே வா கதாச்சின் நாயம் பூத்வா பாவித வா ந பூயஹ

அஜோ நித்யஹ ஷாஷ்வதோயம் புரானோ ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே




பொருள்:

ஆன்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ,இறப்போ இல்லை. அவன் ஒரு முறை இருந்து பிறகு இல்லாமல் போவதும் இல்லை. அவன் பிறப்பற்றவன், நித்யமானவன், என்றென்றும் இருக்கும் மிக பழமையானவன். அவன் உடல் அழியும் பொழுது அவன் அழிக்கப்படுவதில்லை.

(ப.கீ_2.22)

வாசம்சி ஜீர்னானி யதா விஹாய நவானி க்ருஹனாதி நரோபரானி

ததா ஷரீரானி விஹாய ஜிர்னானி அன்யானி சம்யாதி நவானி தேஹி


பொருள்:

ஒருவன் எப்படி பழைய உதவாத ஆடையை கழற்றிவிட்டு புதிய ஆடையை அணிகிறானோ அதேபோல் ஆன்மா உதவாத இறந்த உடலை விட்டு வேறு ஒரு புதிய உடலை ஏற்கிறான்.

(ப.கீ_2.23)

நைனம் சின்தன்தி ஷஸ்த்ரானி நைனம் தஹதி பாவகஹ‌

ந‌ சைனம் க்லேதயந்தி ஆபோ ந ஷோஸயதி மாருதஹ‌


பொருள்:

ஆன்மாவை எந்த ஒரு ஆயுதத்தாளும் துண்டாக்கவோ, நெருப்பால் எரிக்கவோ, நீரால் நனைக்கவோ, காற்றால் தூற்றவோ முடியாது.

மேலும் அவனை கரைக்கவோ, உலர்த்தவோ முடியாது. அவன் மாற்றமற்றவன், கண்ணுக்கு தென்படாதவன், கற்பனைக்கு அப்பாற்பட்டவன். இப்படி இன்னும் பல உண்மைகளை சொல்லி கொண்டே போகிறார். 'நான்' என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று இப்போது புரிகிறதா?. இப்படிபட்ட உன்னதமான ஆன்மா, மாய சக்தியால், தான் இந்த உடல் என்று நினைத்துக்கொண்டு, கட்டுப்படுத்தப்படாத மனதில் எழும் தகாத ஆசைகளை தன் புலனுறுப்புகள் மூலம் நிறைவேற்றிகொள்கிறான். இப்படி அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு நல்ல அல்லது தீய கர்மங்களை சேர்க்கிறது. இந்த நல்ல அல்லது தீய கர்மங்களின் கணக்குப்படி அவனுடைய அடுத்த ஜென்மம் அல்லது அடுத்த உடல் நிர்ணயிக்கப்படுகிறது. அவனுடைய அடுத்த உடல் , ஒரு செல் பரமீசியம் முதல் தொடங்கி 84,00,000 சிற்றினங்களில் ஏதாவது ஒரு உடலாக இருக்கலாம். ஒருவேளை அவனுக்கு விலங்கு உடல் கொடுக்கப்பட்டால், அவன் மீண்டும் மனித உடல் பெறுவதற்கு‌ கணக்கிடமுடியாத ஜென்மங்கள் எடுக்க வேண்டி வரும். அதேபோல் இப்போது, நல்ல கர்மங்கள் (புண்ணியங்கள்) செய்து சொர்கலோகம் அல்லது மற்ற பிற லோகங்களுக்கு சென்றவர்களின் நிலை என்ன? என்பதை கீழுள்ள ஸ்லோகம் மூலம் பார்ப்போம்.

(ப.கீ_9.21)

தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஷாலம் ஷீனே புண்யே மர்த்ய லோகம் விஷந்தி

ஏவம் த்ரை தர்மம் அனுபிரபண்ணா கதாகதம் காம காமா லபந்தே


பொருள்:

தேவலோகங்களின் அதீத புலனின்பங்களை அனுபவித்து முடித்து, தங்கள் புண்ணிய செயல்களின் பலன்கள் தீர்ந்ததும், ஆன்மாக்கள் இந்த மண்ணுலகத்தை வந்தடைகின்றனர். இவ்வாறு வேத வழிமுறைகளை பின்பற்றுவதால் கிடைக்கும் புலனின்பங்களை தேடுபவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியிலேயே தொடர்ந்து சுழலுவர்.

என்னய்யா இது? பாவம் செய்தாலும், இந்த மண்ணுலக பிறப்பு இறப்பு சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கவேண்டிவரும் என்கிறீர்கள். புண்ணியம் செய்தாலும் இறுதியில் இதே சுழற்சிக்கு தான் வரவேண்டும் என்கிறீர்கள் பிறகு இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட என்னதான் வழி? என்று கேட்கிறீர்களா. இதற்கான விடையை கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

(ப.கீ_ 8.8)

அப்யாச யோக யுக்தேன ச்சேதச நான்ய காமினா

பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தா அனுச்சின்தயன்.


பொருள்:

என்னை பரமபுருஷனாக எவனொருவன் தியானிக்கின்றானோ, அவன் மனம் பாதையிலிருந்து விலகாமல், தொடர்ந்து என்னை பற்றி நினைப்பதிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கும். ஓ பார்த்தா(அர்ஜுனா), அவன் நிச்சயம் என்னை அடைவான்.

(ப.கீ_8.15)

மாம் உபேத்ய புனர் ஜென்ம துக்காலயம் அஷாஷ்வதம்

நாப்னுவந்தி மஹாத்மானஹ சம்சித்திம் பரமாம் கதஹ‌


பொருள்:

பக்தியிலே யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பின்னர், இந்த துன்பம் நிறைந்த தற்காலிகமான உலகிற்கு மீண்டும் வருவதில்லை, ஏனெனில் அவர்கள் உன்னத நிலையை அடைந்துவிட்டனர்.

(ப.கீ_8.16)

ஆ பிரம்ம புவனால் லோகஹ புனர் ஆவர்தினோ அர்ஜுனா

மாம் உபேத்ய து கெளந்தேய புனர் ஜென்ம ந‌ வித்யதே


பொருள்:

பிரம்ம லோகம் முதல் பாதாள லோகம் வரை அனைத்திலும் பிறப்பு இறப்பு சுழற்சி நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் என்னுடைய இருப்பிடத்தை (வைகுண்ட லோகம்) அடைந்தவன் மீண்டும் பிறவி எடுப்பதில்லை, ஓ குந்தியின் மகனே!.

எனவே கிடைப்பதற்கு அரிதான இந்த மனித பிறவியை சரியாக பயன்படுத்தி, தான் இந்த உடல் அல்ல என்பதை உணர்ந்து, மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, உடல் ரீதியான பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, தன்னை (ஆன்மா) பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒன்றிணைத்தலே யோகவின் அடிப்படை நோக்கமாகும்.



யோகமுறையின் வகைகள் மற்றும் அதை செய்யும் முறைகள்

யோகமுறைகளில் குறிப்பிட தக்கவை அஷ்டாங்க அல்லது தியான‌ யோகா, கர்ம யோகா மற்றும் பக்தி யோகமாகும்.

அஷ்டாங்க அல்லது தியான‌ யோகம்

அஷ்ட‍_ எட்டு; அங்க_ நிலைகள். எட்டு நிலைகள் கொண்ட யோகமுறை என்று பொருள். இந்த முறை பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டது. இதன் எட்டு நிலைகளான‌ யாம மற்றும் நியம நிலைகள் நன்நடத்தை பயிற்சிகள் பற்றியும், ஆசன நிலை உடற்பயிற்சி பற்றியும், பிராணயாம நிலை மூச்சை கட்டுப்படுத்தும் முறை பற்றியும், பிரத்யஹார நிலை புலனுறுப்புகளை கட்டுப்படுத்தும் முறை பற்றியும், தாரன நிலை மனதை நிலைபடுத்தும் முறை பற்றியும், தியான நிலை பரம்பொருளின் மீது மனதை குவிக்கும் முறை பற்றியும், கடைசி நிலையான சமாதி நிலை இதயத்தில் உள்ள பரமாத்மாவான விஷ்ணுவின் மீது ஆழ்ந்த சிந்தணையில் லயித்திருப்பதை பற்றியும் கற்றுதருகிறது.

இந்த தியான யோகத்தை செய்யும் முறை பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ப.கீ_6.(11_12)

ஷுச்செள தேஷே ப்ரதிஷ்டாப்ய ச்திரம் ஆசனம் ஆத்மனஹ

நாத்யுச்ரிதம் நாதினீச்சம் ச்சைலாஜின குஷோதரம்.

தத்ரைகாக்ரம் மனஹ க்ருத்வா யத ச்சித்தேந்திரிய க்ரியஹ‌

உபவிஷ்யாசனே யுஞ்யாத் யோகம் ஆத்ம விஷுத்தயே.


பொருள்:

இந்த யோக முறையை பயில ஒருவன் புணித தலத்திற்கு சென்று தனிமையான இடத்தில் தரையின் மீது குச என்கிற புல்லை நிரப்பி, உயரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாதபடி அதன் மீது மான் தோல் மற்றும் மிருதுவான துணியை வைத்து ஆசனம் அமைக்க வேண்டும். அந்த ஆசனத்தின் மீது யோகி உறுதியாக அமர்ந்து, மனதையும், புலன்களையும், செயல்களையும் கட்டுப்படுத்தி, மனதை ஓரிடத்தில் குவிப்பதன் மூலம் இதயத்தை தூய்மைபடுத்துவதற்கு அவன் யோகம் பயிலவேண்டும்.

ப.கீ_6.(13_14)

சமம் காய ஷிரோ க்ரிவம் தாரயன்னச்சலம் ஸ்திரஹ‌

சம்ப்ரேக்ஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திஷஷ் ச்சானவலோகயன்.

பிரஷாந்தாத்மா விகதபிர் பிரம்மச்சாரி வ்ரதே ஸ்திதஹ‌

மனஹ சம்யம்ய மச்சித்தோ யுக்த ஆசீத மத்பரஹ.


பொருள்:

ஒருவன் தன்னுடைய உடல், கழுத்து மற்றும் தலையை நேர்கோட்டில் நிறுத்தி, மூக்கின் நுனியை நிலையாக நோக்கவேண்டும். இவ்வாறு அசையாமல், ஆழ்ந்த மனதுடன், அச்சமின்றி, உடலுறவிலிருந்து முற்றிலும் விடுபட்டு, இதயத்தினுள் என்னை தியானித்து, என்னை அடைவதையே வாழ்வின் உயர்ந்த குறிக்கோளாக கொள்ளவேண்டும்.

(ப.கீ_6.15)

யுஞ்ஜன்னேவம் சதாத்மானம் யோகி நியத மானசஹ

ஷாந்திம் நிர்வான பரமம் மத் சம்ஸ்தாமதிகச்சதி.


பொருள்:

இவ்வாறு, ஒரு யோகி உடல், மனம், செயல் ஆகியவற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் முறையை பயில்வதன் மூலம் மனதை ஒழுங்குபடுத்தி என் இருப்பிடத்தை (ஸ்ரீ வைகுண்டம்) வந்தடைகிறான்.

என்ன, இந்த யோக முறை நடைமுறையில் முடியுமா? என்று யோசிக்கிறீர்களா! உண்மைதான் அர்ஜுனனுக்கே இந்த தியான யோக முறை, காற்றை கட்டுப்படுத்துவதை விடவும் கடினமான காரியமாகதான் ‌ தோன்றியது. எனவே அவர் வேறு ஒரு எளிய யோக முறையை கூறும் படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கே இந்த நிலை என்றால், கலியுக மக்களான நமக்கு இந்த யோகமுறை எப்படி சாத்தியம்? சரி, இப்போது அடுத்த யோகமுறையை பற்றி பார்ப்போம்.

கர்ம யோகம்

ஒருவன் தான் செய்யும் எந்த ஒரு செயலுக்கும், அதை தொடர்ந்து உண்டாகும் வினைகள் கர்மங்கள் எனப்படும். இயற்கை சத்வ, ரஜோ மற்றும் தாமஸம் என்ற முக்குணங்களால் ஆனது. அனைவரும் இம்மூன்று குணங்களில், தான் கொண்டுள்ள ஏதாவது ஒரு குணத்தினால் தொடர்ந்து ஏதாவது ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஒரு நிமிடம் கூட எதாவது ஒரு செயலை செய்யாமல் இருக்க முடியாது.

என்ன கொடுமை இது? எதுவும் செய்யாமல் இருக்க முடியாது, அப்படி செய்தாலோ அந்த செயல் கர்மங்களை உண்டாகும். கர்மங்கள் நம்மை பிறப்பு இறப்பு சுழற்சியில் ஈடுபடுத்தும். இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி? என்று கேட்கிறீர்களா. கவலை வேண்டாம். கர்ம யோகத்தை பின்பற்றுவதன் மூலம், நாம் விரும்பும் செயல்களையும் செய்யலாம். அதே சமயம் அந்த செயல்களின் கர்மங்களிலிருந்தும் விடுபடலாம். இப்போது மகிழ்ச்சிதானே. இனி கர்மயோகம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செய்யும் செயல்கள் அணைத்தையும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவை திருப்திபடுத்து-

வதற்காகவே செய்ய வேண்டும். இல்லையெனில் செய்யும் செயல் கர்மங்களை விளைவிக்கும். அணைத்து உயிர்களும் உணவு பயிர்களை சார்ந்து இருக்கிறது, உணவு பயிர்கள் மழையை சார்ந்து இருக்கிறது, மழை யாகங்களை சார்ந்து இருக்கிறது. யாகங்கள் புரிவது நாம் செய்ய‌ வேண்டிய கடமையாகும். மேலும் தனக்கு எதை எதை அர்பணிக்க வேண்டும் என்று கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

(ப.கீ_9.27)

யத் கரோஸி யத் அஷ்நாசி யஜ் ஜுஹோஸி ததாசி யத்

யத் தபஸ்யசி கெளந்தேய தத் குருஸ்வ மத் அர்பணம்


பொருள்:

எந்த ஒரு செயலை செய்தாலும், எந்த ஒரு உணவை உண்டாலும், எந்த ஒரு தானம் செய்தாலும் மற்றும் எந்த ஒரு தவம் (விரதம்)செய்தாலும் அதை எனக்கு அர்பணிப்பாயாக‌, ஓ குந்தியின் மகனே!.

மேலே சொல்லப்பட்ட "எந்த ஒரு உணவை உண்டாலும்" என்ற வாக்கியத்தை படித்துவிட்டு, நாளையிலிருந்து நானும், மாமிசம் மற்றும் மதுபானத்தை தினமும் பகவானுக்கு அர்பணித்த பின்னர் அதை பிரசதமாக உண்பேன், என்று குதற்கமாக எண்ணும் அறிவிலிகளும் உண்டு. இவர்களுக்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு எந்தெந்த உணவுப்பொருளை அர்பணிக்க வேண்டும் என்று கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

(ப.கீ_9.26)

பத்ரம் புஷ்பம் பழம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி

ததஹம் பக்தி உபஹ்ரதம் அஷ்னாமி ப்ரயதாத்மனா


பொருள்:

ஒருவன் தூய அன்பு மற்றும் பக்தியுடன் ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு கனியையோ அல்லது நீரையோ அர்பணித்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இதிலிருந்து, அவர் தாவர உணவை மட்டுமே ஏற்கிறார், மாமிச உணவை அல்ல என்பது தெளிவாகிறது. அப்படியென்றால் பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் உணவு பொருட்களை அவர் ஏற்பதில்லையா? என்று நினைக்கலாம். அது அப்படியில்லை, குழந்தைக்கு எப்படி தாய்பாலோ, அதேபோல்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பசும்பால். அதை தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு வெண்ணெய் திருடன் என்ற பட்டமும் மற்றும் கோபாலன் என்ற பெயரும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். அவ்வளவு ஏன், அவர் படுத்திருப்பதே பாற்கடல் மீதுதான்.

(ப.கீ_3.19)

தஸ்மாத் அசக்தஹ சததம் கார்யம் கர்ம சமாச்சர

அசக்தோ ஹி ஆசரண் கர்ம பரம் ஆப்னோதி பூருஷஹ‌




பொருள்:

எனவே , ஒருவன் செயல்களின் பலன்கள் மீது பற்றில்லாமல், அதை தன் கடமையாக எண்ணி செயல்படவேண்டும், அவ்வாறு பற்றில்லாமல் செயலை செய்வதால் அவன் பரம்பொருளை அடைகிறான்.

செயல்களின் பலன்கள் மீது பற்றில்லாமல் கடமையாக எண்ணி அணைத்தையும் பகவானுக்காக அர்பணிப்பதே கர்ம யோகம் ஆகும். இந்த யோகமுறை அஷ்டாங்க‌ யோகமுறையை காட்டிலும் சற்று எளிதானது. இருப்பினும் வேதத்தில் குறிப்பிட்டுள்ள அணைத்து யாகங்களையும், கடமைகளையும் செய்வதற்கு ஒருவர் வேதத்தை தெளிவாக படித்திருக்க வேண்டும். வேதங்களை படிப்பதற்கே நமது இந்த பிறவி போதாது, அப்படிஇருக்க அதை பின்பற்றுவது எப்போது?. எனவே கர்ம யோகமும் சற்று கடினமே. இந்த இரண்டு யோகமுறையை காட்டிலும் மிகமிக எளிதான, அ னைவரும் கடைபிடிக்க தகுந்த மற்றும் கலியுக மக்களுக்கு உகந்த‌ பக்தி யோகமுறையை பற்றி இப்போது பார்ப்போம்.

பக்தி யோகம்

பக்தி தொண்டின் மூலம் பகவான் கிருஷ்ணரை அடைவது பற்றி இந்த யோகமுறை விளக்குகிறது. ஸ்ரீமத் பாகவதத்தில்(7.5.23) ஒன்பது விதமான பக்தி தொண்டின் மகிமை விளக்கப்பட்டுள்ளது.

ப்ரஹலாத உவாச்ச:

ஸ்ரவணம் கீர்தனம் விஷ்ணு ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம் ஆத்ம நிவேதனம்

இதி பும்ஷர்பித விஷ்ணு பக்திஷ்சென்னேவ லக்ஷ்சனா

க்ரியேத பகவதியத்தா தன் மன்யே அதிதம் உத்தமம்.


பொருள்:

பக்த பிரஹலாதன் சொல்கிறார், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஒப்பற்ற புனித நாமத்தை, புகழை, லீலைகளை கேட்பதும் (ஸ்ரவணம்), ஜபிப்பதும் (கீர்தனம்), அவரையே நினைத்துக்கொண்டிருப்பதும் (ஸ்மரணம்), அவர் திருவடிகளுக்கு தொண்டு செய்வதும் (பாத சேவனம்), அவரை பதினாறு விதங்களில் தொழுவதும் (அர்ச்சனம்), அவரை எண்ணி பிரார்த்தனை செய்வதும் (வந்தனம்), அவருக்கு சேவகனாக (தாஸ்யம்) இருப்பதும், அவருக்கு உற்ற நண்பனாக (சக்யம்) இருப்பதும் மற்றும் தன் உடல்,மனம்,சொல் யாவையும் அவரிடத்தில் சரணடைத்தலுமான (ஆத்ம நிவேதனம்) இந்த ஒன்பது செயல்களும் தூய பக்தி தொண்டுகளாக ஏற்றுகொள்ளப்படுகின்றன. எவனொருவன் இந்த ஒன்பது பக்தி தொண்டுகளின் மூலம் தன் வாழ்வை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக அர்பணிக்கின்றானோ, அவனே அணைத்தயும் கற்று தேர்ந்த ஞானியாவான்.

இந்த ஒன்பது பக்தி தொண்டுகளில் எதாவது ஒன்றை சரிவர செய்து வந்தாலே நாம் மோக்ஷ்சம் அடையலாம். இதற்கு உதாரணமானவர்களை பார்ப்போம். பரீக்ஷ்சித் மஹாராஜா ஏழே நாட்களில் மத் பாகவதத்தை கேட்டு(ஸ்ரவணம்)மோக்ஷ்சம் அடைந்தார். சுகதேவ கோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதத்தை அனைவருக்கும் எடுத்துச்சொல்லியே(கீர்தனம்) மோக்ஷ்சம் அடைந்தார். பக்த பிரஹலாதன் பகவானை நினைத்துக்கொண்டே(ஸ்மரணம்) மோக்ஷ்சம் அடைந்தார். மஹாலக்ஷ்மி மாதாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் நித்தியமாக பகவான் திருவடிகளுக்கு தொண்டு(பாத சேவனம்) புரிந்து கொண்டேஇருக்கின்றனர். ப்ருது மஹாராஜா கிருஷ்ண‌ வழிபாட்டின்(அர்ச்சனம்) மூலம் மோக்ஷ்சம் அடைந்தார். அக்ரூரர் பகவானை பிரார்தனை(வந்தனம்) செய்து மோக்ஷ்சம் அடைந்தார். ஹனுமான் இராமபிரானுக்கு சேவகனாக(தாஸ்யம்) இருந்தே மோக்ஷ்சம் அடைந்தார். அர்ஜுனன் பகவான் கிருஷ்ணருக்கு நண்பனாக(சக்யம்) இருந்து மோக்ஷ்சம் அடைந்தார். பலி மஹாராஜா திரிவிக்ரமனான வாமனனுக்கு தன்னையே அர்பணித்து(ஆத்ம நிவேதனம்) மோக்ஷ்சம் அடைந்தார். பக்தி யோகம் எவ்வளவு சுலபம் என்று இப்போது புரிந்துகொண்டீர்களா!.

மேலும் யோகமுறை யுகதர்மங்களுக்கு ஏற்றவாறு பின்பற்றப்படுகிறது. சதுர்யுகங் களான சத்ய அல்லது க்ருத யுக மக்களுக்கு தியானத்தின் மூலம் பகவானை அடையும் முறையும், த்ரேதா யுக மக்களுக்கு யாகம் அல்லது யக்யம் புரிவதன் மூலம் பகவானை அடையும் முறையும், த்வாபர‌ யுக மக்களுக்கு அர்ச்சனம்(வழிபாடு) செய்வதன் மூலம் பகவானை அடையும் முறையும் மற்றும் கலியுக மக்களுக்கு நாமசங்கீர்த்தனத்தின் மூலம் பகவானை அடையும் முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை ப்ருஹன் நாரதிய புராணம்(அத்_17.21) கீழுள்ள ஸ்லோகத்தின் மூலம் எடுத்துரைக்கிறது.

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்

கலெள நாஷ்தி ஏவ நாஷ்தி ஏவ நாஷ்தி ஏவ கதிர் அன்யதா.


பொருள்:

சண்டை சச்சரவு மிக்க இந்த கலியுகத்திலிருந்து நம்மை, ஹரிநாமசங்கீர்த்தனத்தை தவிர வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது.

இதை வலியுறுத்தவே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மேற்குவங்காளத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். அவரின் இந்த அவதாரம் கலியுகத்தில் வாழும் அணைத்து கைவிடப்பட்ட‌ மக்களையும் விடுவிக்கும் அவதாரமாக அமைந்திருந்தது. இவரும், இவருடைய தலைமை சீடர்களான நித்யானந்த பிரபு (ஆதிசேஷன் அம்சம்), அத்வைத பிரபு (மஹா விஷ்ணுவின் அம்சம்), கதாதர பிரபு (ஸ்ரீமதி ராதாராணியின் அம்சம்) மற்றும் ஸ்ரீவாசா பிரபும் (தேவரிஷி நாரதர் அம்சம் ) சேர்ந்து பஞ்ச தத்வா என்று போற்றப்படுகின்றனர். இந்த ஐவரும் இணைந்து மேற்குவங்கம் மற்றும் பூரியின் ஒவ்வொரு தெருக்களிலும்

ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! கிருஷ்ணா கிருஷ்ணா! ஹரே ஹரே!

ஹரே ராமா! ஹரே ராமா! ராமா ராமா! ஹரே ஹரே!


என்று இந்த‌ ஹரிநாம மந்திரத்தை ஒலிக்கச்செய்தனர். இன்று இம்மந்திரம், அகில உலக கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் (இஸ்கான்) மூலம் உலகெங்கிலும் ஒலிக்கிறது.

நாமசங்கீர்தனம் ஒன்றை மட்டுமே செய்யத்தொடங்கினால் போதும், மற்ற பத்திதொண்டுகளில் உங்களை அறியாமலேயே நீங்கள் அந்த மஹாலக்ஷ்மியை கவர்ந்த லக்ஷ்மிகாந்தனால் கவரப்படுவீர்கள்.

இவ்வளவு எளிமையான இந்த பக்தி யோகத்திற்கு நான்கு எளிய விதிமுறைகள் உள்ளது. அவை


1. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது.

2. புலால் உண்ணுதல் (மாமிச உணவு) கூடாது.

3. எந்த வித சூதாட்டமும் கூடாது.

4. தகாத உடலுறவு கூடாது.

கிருஷ்ணா என்று உள்ளத்தில் எழும் காதலுடன் அவரை அழைக்கத்தொடங்குங்கள், கண் இமைக்கும் நேரத்தில் இந்த தீய பழக்கங்களிலிருந்து உங்களை விடுவிப்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.


ஆன்மீக‌குருவின் அவசியம்

யார் குரு? சதாசர்வ காலமும் யாரொருவர் பகவான் கிருஷ்ணரை பற்றி பாடி கொண்டும், பேசிக்கொண்டும், அவர் நினைவிலேயே இருக்கின்றாரோ அவரே குரு ஆவார். மேலும் இந்த குரு, இவரைபோன்று மற்றொரு குருவிற்கு சிஷ்யனாக இருக்கவேண்டும். மேலும் இவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களான பிரம்ம மத்வ கெளடிய சம்பிரதாயம், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம், ருத்ர சம்பிரதாயம், நிம்பர்க்க சம்பிரதாயம் இவற்றில் ஏதேனும் ஒரு சம்பிரதாயத்தின் குரு சிஷ்ய தொடர்சங்கிலியில் வருபவர்களாக இருக்கவேண்டும். விளக்கில்லாமல் இருளில் செல்வதும், குரு இல்லாமல் கடவுளை அடைய முயற்சிப்பதும் ஒன்றே. இதை உணர்தவேதான் இராமனாக அவதரித்த போது வசிஷ்டரையும், கிருஷ்ணராகவே தோன்றியபோது சாந்திபனி முனிவரையும், பகவான் குருவாக ஏற்றுக்கொண் டார்.

முடிவுரை


(ப.கீ_8.5)

அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரண் முக்த்வா கலேவரம்

யஹ் பிரயாதி ச மத் பாவம் யாதி நாஷ்தியத்ர சம்ஷயஹ‌


பொருள்:

எவனொருவன் இறக்கும் தருவாயில் என்னை மட்டுமே நினைத்துக்கொண்டு தன் உடலை துறக்கின்றானோ, அவன் உடனடியாக என்னை அடைகிறான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதை படித்துவிட்டு, மரணத்தின் போது மட்டும் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்தால் போதும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சாதாரண தலைவலி வந்தாலே பகவான் மீது சிந்தனை செலுத்துவது கடினம், அப்படியிருக்க மரணம் என்பதென்ன சாதாரண வலியா?. பக்தியோகத்தில் மூழ்கியிருக்கும் யோகிகளால் மட்டுமே மரண காலத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது சிந்தனை செலுத்தமுடியும். வேறு எவராலும் முடியாது.

(ப.கீ_18.66)

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷ‌ரணம் வ்ரஜ

அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷ்சயிஸ்யாமி மா ஷுச்சஹ‌


பொருள்:


அணைத்து தர்மங்களையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடை. அணைத்து பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். கவலைபடாதே.

என்று பகவான் நமக்கு உறுதியளிக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சரணடைவதே தர்மங்களிலெல்லாம் உயர்ந்த‌ தர்மமாகும். எனவே உயர் தர்மத்திற்காக மற்ற தர்மங்களை கைவிடுதல் தவறில்லை. இவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது மனதை செலுத்துவதே தியானமாகும். அவரை அடைய முயற்சிக்கும் வழிகளே யோகங்கள் எனப்படும். அனைவரும் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை படித்து மோக்ஷ்சம் அடைய எனது வாழ்த்துக்கள்.


--
Nagarajan.M
Assistant Manager-Manufacturing
Haldia Petro Chemicals
M:9733595105


Nagarajan. M

Asst.Manager-manufacturing(IOP)

Haldia petrochemicals ltd,

Phone: 9733595105

Email: manonaga@gmail.com

Address:

A26/2C, HREL township,

Pithambar chak(PO),

Haldia,

Wetbengal-721657

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? 015

---------- Forwarded message ----------
From: Nila saki <nilasaki@in.com>
Date: 24 June 2010 03:25
Subject: kaddraip-poddi
To: admin <admin@sivastar.net>


ஒரு பெண்ணின் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் மனிதக் குழந்தையின் பாலினம் பெண்ணென்றால் ,அதை அழிக்க துணிகின்றனர் பெற்றோர்.இந்த பாவத்தை செய்ய துணிவதில் ஆணென்ன?பெண்ணென்ன ? பெற்ற மனம் தான் என்ன ? .அனைத்தும் கள்ளமுள்ள சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. கோழைத்தனமும்,மூட நம்பிக்கைகளும் மாயையாய் இவர்களை ஆட்டிப் படைக்கிறது .இதே சமுதாயம் தான் பெண் கடவுளர்களை வணங்குகிறது , இதே சமுதாயம் தான் மொழி நாடு நீர் நிலையென அனைத்தையும் தாயென கூறி உயர்த்துகிறது .ஆனாலும் ஏனிந்த பாகுபாடு ?.அன்று தாய்மடி பாராப் பச்சிளம் குழந்தைக்கு சங்கில் கள்ளிப்பால் புகட்டியும் நெற்மணி ஊட்டியும் கொன்று வந்த மக்கள் ,இன்று விஞ்ஞான வளர்ச்சியில் கொலையை நேர்த்தியாய் செய்கின்றனர் தாய் கருப்பையிலேயே பாலினம் கண்டு உயிரைக் களைக்கின்றனர் .இது கிராமப்பகுதியில் மட்டுமல்ல நகரப்பகுதிகளிலும் இத்தகைய கொடுமைகள் நடந்துவருகின்றன இதற்குத் தீர்வுதான் என்ன ?எங்கே இந்த நஞ்சு விதிக்கப்பட்டதோ அதையறிந்து இந்த குற்றத்தை வேரோடு பிடுங்கி எறியவேண்டும்.

பெண் சிசுக்கொலைக்காக கூறப்படும் காரணங்கள்

"என்ன பெண் குழந்தையா?எப்படி கட்டிக்கொடுக்க போகுற ? "போன்ற சமுதயாத்தின் வார்த்தைகளுக்கு அஞ்சியே பல பெற்றோர்கள் இந்த பாவச்செயலுக்கு துணிகின்றன .மேலும் நமது சமுதாய நம்பிக்கையின் படி ஆணை மட்டுமே குடும்ப வாரிசாகவும் அவனுக்கே மட்டுமே பெற்றோர் இறந்தால் கொள்ளிவைக்கும் நிலைமையும் இருக்கின்றது . வரதட்சணைப் பழக்கத்தால் மகளென்றால் செலவு என்றும்,மகனென்றால் வரவு என்றும் நினைக்கின்றனர்.இது போன்று ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன .

பெண் சிசுக்கொலையால் ஏற்படும் தீமைகள்

கிழக்காசிய நாடுகளான இந்தியா ,சீனா,திபெத்து ஆகியவையில் தான் இந்த கொடுமை பரவலாக நடக்கிறது.ஒரு நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமன்பட்டு இருக்க வேண்டும்.அதுதான் இந்த சமுதாயத்துக்கும் நல்லது ,நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது.ஆனால் இந்தியாவில் நூறுஆண்களுக்கு தொன்னூற்றி மூன்று என்ற எண்ணிக்கையில் தான் பெண்கள் உள்ளன .மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவெனில் ஒரு கணக்கெடுப்பின் படி 2020- இல் இந்தியாவில் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் சைனாவில் முப்பத்தி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் அளவுக்குஅதிகமாகவே இருப்பார்.நினைத்துப்பாருங்கள் தற்பொழுதே ஆண்களுக்கு பெண் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிட்டது .இதனால் பாலியல் முறைகேடுகள் அதிகமாய் பெருகிவிட்டன.மேலும் பல சமுதாய சீர்கேடுகள் பெருக வாய்ப்புள்ளது.கருக்கலைப்பு செய்யும் பொழுதும் ,பிறந்த பிறகு குழந்தையை கொல்லும் பொழுதும் தாய் மனதளவிலும்.உடலளவிலும் பெரிதாய் பாதிக்கப்படுகிறாள்.

பெண் சிசுக்கொலைக்கு எதிரான நடவடிக்கைகள் - ஒரு ஆய்வு

பெண் சிசுகொலையின் தீவிரத்தை உணர்ந்த அரசு விழித்துக்கொண்டது . வரதட்சணைக்கு எதிரான சட்டம் / வரதட்சணை ஒழிப்புச் சட்டம்- 1961 அமலில் உள்ளது . இருப்பினும் அனைத்து ஆண்களும் தாங்கள் "வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வோம்" என்று உறுதி மொழி எடுக்கவேண்டும் .

அடுத்து கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம் - PCPNDT act -1994 .மெத்தப்படித்த மகப்பேறு மருத்துவர்கள் தொழில் போட்டிக் காரணாமாகவும் பண ஆசையினாலும் கருவை அழிக்க துணிகின்றன.இதில் பெண் மருத்துவர்களும் அடங்குவர் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய செய்தி

மேலும் பெண் சிசுக்கொலை கண்டறியப்பட்டால் குறைந்தபட்ச தண்டனைப் பதினான்கு ஆண்டுகள் தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் கிடைக்கும் .உடந்தையாய் இருந்தவர்களுக்கும் கொலைக்கு தூண்டியவர்கள் என்று கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் ஆய்வுக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுவதுடன் அபராதத் தொகையுடன் கூடிய தண்டனைகளும் தரப்படுகின்றன .ஆனாலும் பல உண்மைகள் மருத்துவமனைகளிலும் ,ஆய்வுக்கூடங்களிலும் மூடிமறைக்கப்படுகின்றன.நமது அரசு இந்த விசயத்தில் பாரா முகமாகவே இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

'தொட்டில் குழந்தைத் திட்டம்' மூலம் சிசுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது தமிழக அரசு .இதைப் பின்பற்றி கேரளாவும் 'அம்மா தொட்டில்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது .இதனால் சிசுக்கள் கொல்லப்படுவதும் குப்பைத்தொட்டியில் தெருநாய்களுக்கு இரையாவதும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது .இருப்பினும் பல தாய்மார்கள் குழந்தையை கொன்றாலும் பரவாயில்லை.தத்துகொடுக்கமாட்டேன் என்று அறியாமை இருளிலிருந்து வெளிவர மறுக்கின்றனர்.

பெண் கல்விக்கும் உரிமைக்கும் ஆதரவான சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன .இது சரியாக மக்களைப் போய்ச்சேர அரசு ஆவணம் செய்யவேண்டும்.கிராமத்து பெண்களுக்குத் தங்களுக்குத் தரப்படும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு பெறவேண்டும்.குழந்தை இல்லாத தம்பதியினர் 'பெண் குழந்தைகளைத்' தத்தெடுக்க முன்வரவேண்டும்.

சாதிச் சங்கங்களினால் இந்த புரட்சியை செய்ய முடியும்.தத்தமது சாதிகளில் பெண் வீட்டார் அளவுக்கு அதிகமாக அதிக நகைகள் மற்றும் பொருட்கள் தந்து திருமணம் புரிவதைக் கண்டிக்கவேண்டும் .

பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் கிடைக்கும் மனவலிமையையும் பொருளாதார மேன்மையையும் ஊடகங்கள் மூலமாக அறியச்செய்யவேண்டும். கைம்பெண்,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இது ஒரு ஊன்றுகோலாய் அமையும். இதனால் கிடைக்கபோகும் பயன் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல.இந்த சமுதாயமே உயர்வை நோக்கி செல்ல உதவும் .அரசு வேலைகளிலும் ,தேர்வுகளிலும் முக்கியமாக குடிமைப்பணிகளுக்கு பெண்ணுக்கு வழங்கப்படும் சலுகைகளும் அறியச்செய்ய வேண்டும் .சில தனியார் நிறுவனங்களும் பெருஞ்சேவை நோக்கத்துடன் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளும் , திறமையுணர்ந்து பதவி உயர்வுகள் கொடுக்கின்றனர்.

கொலைபுறிவோம் அவலத்தை

மேற்கூறியவற்றை பயன்படுத்திக்கொண்டாலே போதும்.இனி மண்ணில் உதிக்கும் பெண்மணிகளைப்பார்த்து இந்த பாரே பாடும் " மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா".

இனி கொள்ளிவைக்க ஒரு மகன் இல்லையே என்று புலம்புவது அர்த்தமற்றது .பெண்களும் பெற்றோரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் நடைமுறை என்றோ வந்துவிட்டது . தன்னை வாழவைக்க பெண் பிள்ளை இல்லையே! என்று வருத்தப்படும் காலம் வந்துவிட்டது .

சட்டங்கள் மட்டும் வந்தால் போதுமா ?

ஆண்களே !உங்கள் வீட்டுப் பெண்களை மதிக்கப் பழகுங்கள் ,சகப்பணியாளரிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள், போகப்பொருளாய் பெண்டியரைப் பார்ப்பதை மறவுங்கள் ,உயர்ந்து வரும் பெண்மணிகளை எள்ளி நகையாடுவதை நிறுத்துங்கள் .கைகொடுத்து மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்.

பெண்மணிகளே! பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா ? கயமை குணத்தை விட்டொழியுங்கள்.உங்கள் இறப்பிற்குப்பிறக்கும் உங்கள் தாய்மை குணம் போற்றப்படும் .பெண்ணின் மகத்தான சக்தியை உணருங்கள்.தவறாக பயன் படுத்தாதீர்கள். கல்வியால் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் சந்ததியினரையே வழிநடத்தி செல்லும்.பெண் சிசுக்கொலை என்ற வார்த்தை அகராதியிலிருந்து அழிக்கப்படும் நாள் வெகுதூரமில்லை .

தொலைதூரக் காதல் - 034

---------- Forwarded message ----------
From: sheik salahudeen <nanbansala@yahoo.co.in>
Date: 2010/6/23
Subject: ஈகரை - தொலைதூரக் காதல் - போட்டிக் கவிதை
To: admin@sivastar.net


தோழர் சிவா,
ஈகரை கவிதைப்போட்டிக்கான என் கவிதையை இத்தோடு இணைத்துள்ளேன்.
பெயர்: சலாகுதீன்
ஈகரை புனைப்பெயர் : தாளையன்
வசிப்பது: துபாய்
தொலைதூரக் காதல்....

தூரம்...
உன் இதயத்திற்கும்
என் இதயத்திற்குமா ?
இல்லை
உன் இடத்திற்கும்
என் இடத்திற்குமா ?

தூரம்...
இடம் என்றால்..
அதை கடக்க
வேண்டும் பல வாரம்

தூரம்...
இதயம் என்றால்..
அது நான்
வேண்டி நின்ற வரம்

உனக்கும்..
எனக்குமான..
பறிமாற்றங்கள்
மிகுதியாக
இல்லை

ஒரே பார்வை.
ஓரிரு வார்த்தை..
உயிர் கிள்ளும் சிரிப்பு
உளம் கொண்ட நினைப்பு
இது மட்டுமே

இருந்தும்
எது ஈர்க்கிறது என்னை உன்பால்
நீ எனக்காகவே இறைவன் படைத்த பெண்பால்..

சூரியன் சுட்டுவிடும் தெரியும் எனக்கு
என் வியர்வை துடைக்க உன் முந்தானை போதும் எனக்கு

வானம் தொட்டுவிடும் தூரம் தெரியும் எனக்கு
நான் மானம் காக்கும் ஆடையாய் மாறவேண்டும் உனக்கு

உதயம், உச்சம், அஸ்தமனம் இதுதானே இயற்க்கை வழக்கு
உன்னோடு மட்டுமே என் வாழ்க்கை இது இதயக் கணக்கு

இப்போது எப்படி
இருப்பாய் நீ ?
எப்படி இருந்தாலும் எனை
ஈர்ப்பாய் நீ....

வருந்தவில்லை நான்..
நீ என் தொலைதூரத்தில்
இருப்பதினால்.....
கரை வரண்டா போகும் ?
அது அலை ஓரத்தில்
இருப்பதனால்.....

நான் ஆள நினைப்பது
இந்த சாம்ராஜ்யங்களை அல்ல...
உன் கன்னக்குழிகளின் ஈரத்தை !

நான் வாழ நினைப்பது
முழு பிரபஞ்சத்திலும் அல்ல...
உன் மெல்லிய நிழலின் ஓரத்தில் !

உனைச் சேர நினைத்து
எழுதப்படும் என் கடிதங்கள் எல்லாம்
முடிக்கப்படாமலேயே
என்னால்
கிழிக்கப்பட்டுவிடுகின்றன !

அது உன்னிடம் வந்து சேராதோ
என்கிற அச்சத்தினால் அல்ல...

அது என் இதயப்பையில்
உன் காதல் மட்டுமே இருக்கின்ற மிச்சத்தினால்...

நமக்கு இடையேயான தூரம்
நம்மை பாகுபடுத்தவில்லை
மாறாக என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது..

உன் மீதான என்
ஆசை,
விருப்பம்,
ஏக்கம்,
கனவு

எல்லாம் சேர்ந்து
காதல் என்ற உயிராகி
என்னுள்
கரு கொண்டுவிட்டது


அந்த கரு
காயாகி,
கனியாகி,
கொடியாகி,
விழுதாகும்
வரை என் உயிரூற்றி
பார்த்திருப்பேன்....

ஒரு ஜென்மம் என்ன
ஓராயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
நான் உனக்காக காத்திருப்பேன்.

திங்கள், 21 ஜூன், 2010

பிரியாத வரம் வேண்டும்! 033

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/22
Subject: கவிதைப் போட்டி : பிரியாத வரம் வேண்டும்
To: eegaraipoem <admin@sivastar.net>



பிரியாத வரம் வேண்டும்

ஜனனம் முதல்
ஜாதி
மதப் பிரிவினைகள்
மரணம் வரை

மதம்
பிடித்துப் போனதில்
மதம்பிடித்துப்
போகிறது
இந்த
மனிதர்களுக்கு

சாதிகள் கூட
சாக்கடைதான்
உரைக்கவில்லை

இவர்களுக்கு

உள்ளத்திலும்
உதிரத்திலும்
ஊறிப்போனதில்

மனிதனையும்
மனதினையும்
விடவும்
பிரிவுகள் தான்
பெரிதா ?
புரிவதில்லை
இந்தப்
பிரிவினை
வாதிகளுக்கு

தொட்ட
இடமெல்லாம்
கொட்டிக்கிடக்கின்றன
பிணக்குகளும்
பிரிவுகளும்

என்ன
கண்டுவிட்டோம்
பிரிந்து பிரிந்து
நின்று

கொஞ்சம்
தள்ளிவைத்து
பார்ப்போம்
அத்தனை
பிரிவுகளையும்
நம்
பிணக்குகளையும்
கூடி நின்று.

- நியாஸ்


பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! 013

---------- Forwarded message ----------
From: sumathy udayakumar <udayasudha06@rediffmail.com>
Date: 2010/6/21
Subject: பெண்ணாக பிறந்திட‌......
To: admin@sivastar.net


எல்லாருக்கும் வணக்கம்

பெண்ணாக பிறந்திட தவம் செய்து இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

ஏனெனில் இந்த உலகத்தையே உருவாக்குபவள் பெண். அவள் இல்லை என்றால் மனித இனத்திலும் சரி,வேறு எந்த இனத்திலும் சரி உயிர்கள் இருக்க முடியாது.

பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து,பல இன்னல்களை அனுபவிச்சு, தன் உயிர் போகும் வலியில் பெற்றெடுக்கும்போதெ தெரிகிறதெ,அவள்தான் சிறந்தவள் என்று. இவன் ஆண்மகன் என்று தன் பிரசவத்தின் மூலம் ஒருவனை பெருமைபடுத்துவதும் பெண்தான்.

நேற்று சாதனை படைத்த,இன்று சாதனை படைத்துக் கொண்டு இருக்கும்,

நாளை சாதனை படைக்கும் அத்தனை பேருக்கும் பின்புலமாக இருக்கும் சக்தி பெண்சக்தி.அது அம்மாவாக,மனைவியாக,சகோதரியாக,ஏன் தோழியாக கூட இருக்கலாம்.ஆக ஒரு ஆணை அவனது திறமைகளை கண்டுபிடிச்சு அனைவரும் அறியும்படி கொண்டு வருபவள் பெண்.

எல்லாவற்றுள்ளும் ஒரு பொறுப்புணர்வுடன் செயல்படுபவள் பெண்.அவள் காட்டும் அன்புக்கும்,கொடுக்கும் அரவணைப்புக்கும் இந்த உலகில் ஈடு,இணை இல்லை.துணிச்சலுக்கு ஒரு இந்திரா காந்தி,பொறுமைக்கு ஒரு சாரதா தேவி, அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒரு அன்னை தெரசா.இது போல எத்தனையோ இந்திரா காந்திகளும்,சாரதா தேவிகளும்,தெரசாக்களும் வெளியெ தெரியாமல் தன்னகத்தே கொண்டு உள்ள இனம் பெண் இனம்.

குடும்ப பாரம் தாங்காமல் ஓடி போகும் கணவனுக்கு பின்னாடி தன் குடும்பத்தை எடுத்து நடத்தும்,குழந்தைகளை வளர்க்கும் எத்தனை இந்திரா காந்திகள்.கணவர் இறந்தாலும் மறுமணத்தை பற்றி எண்ணாமல் தன் குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் எத்தனை பெண்கள்?

இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?

எல்லாரும் கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.

ஆனால் இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார் ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை

நான் மேலே கூறிய குணங்களுக்கு மாறுபட்ட பெண்களும் உண்டு.ஆனால் அவர்கள் 100 சதவிகித்ததில் ஒரு சதவிகிதமே.

இன்று வேண்டுமானால் பெண் இனம் இருக்கும் இடம் தெரியாமல்,உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நாளை இந்த உலக செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஆகபோவது பெண் இனம்தான்.


எழுதியவர்:உதயசுதா
நிஜ பெயர்.உ.சுமதி
வசிப்பிடம்:துபாய்


ஞாயிறு, 20 ஜூன், 2010

ஈழம் என்று மலரும் ? 032

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/19
Subject: கவிதைப் போட்டி: ஈழம் என்று மலரும் ?
To: eegaraipoem <admin@sivastar.net>



விதிக்கப்பட்டிருகிறோம்
இந்தக்
கண்ணீர் தேசத்தில்
விடியலே கூடாத
இரவு வாசிகள் என்று.. !

இதோ பாருங்கள்
கயவர்களை,
கல்லறை
கட்டிக்கொண்டிருக்கிறார்கள்
எங்கள்
கண்ணீர்க் குவியலில்.. !
இவர்களின்
இனவெறிக்கு
இரையாய்
மரணிக்கப்படும்
எங்கள் மனிதர்கள்.. !
நீதியை விடவும்
எங்கள்
உயிர்களின் மீதியே
இவர்களுக்குத் தேவை.. !

ஆம், இங்கே
வாதிகள் எவரும்
வாதங்களை
வைப்பதில்லை
தீவிரவாதத்தைத்தான்.. !

நகர மறுக்கிறது
எம் நாட்கள்
பிணச்சுமையும்
மனச்சுமையும்
கூடிப் போனதில்..!
அவர்களின்
இனப்போராட்டத்தில்
தாங்க முடியவில்லை
எங்கள்
மனப்போராட்டங்களை..
கேட்டுச் சொல்லுங்கள்
தயவுசெய்து
யாரிடமேனும்
என்று மலரும்
எங்கள்
ஈழம் என்று.. !
- நியாஸ்

தமிழுக்கு அமுதென்று பேர்...! 031

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/19
Subject: தமிழுக்கு அமுதென்று பேர்...!
To: admin@sivastar.net

தமிழுக்கு அமுதென்று பேர்...!


எம்மொழியும் கண்டிராத
செம்மொழியாம் தமிழ்
இன்னிசைக்கு இசைபாடும்
இன்பமயம் இன்பத்தமிழ்

எழுத்தொலியும் கருத்தொலியும்
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்

பாக்களுக்குப் பாவெடுக்கும்
பஞ்சாமிர்தம் பார்த்தமிழ்
பாமகனைப் பார்போற்ற
பல்லவியும் பைந்தமிழ்

மழலையின் தூக்கமும்
மணாளனின் மாலையும்
மரண அமங்கலமும்
மஞ்சம் சேர்க்கும் தமிழ்

தமிழ்த்தித்திப்பும் தவிப்பும்
தரணியில் காணாத வியப்பும்
தங்கத்தமிழுக்கு உண்டான திகைப்பு
அமுதம் தோற்ற தமிழ் வார்ப்பு


நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்

பெண்ணுக்குள் பூகம்பம்...! 030

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/19
Subject: பெண்ணுக்குள் பூகம்பம்...!
To: admin@sivastar.net


பெண்ணுக்குள் பூகம்பம்...!

பெண் பிறந்ததால்
மனம் சோர்ந்த தாயுள்ளம்
பெண்ணை வளர்த்தெடுக்க
பெண்காப்பில் தாயுள்ளம்

பள்ளி சென்ற மகள்
பாதை மாறுமா எனும் தாயுள்ளம்
வேலை சென்ற மகள்
வீடு சேருமா எனும் தாயுள்ளம்

வளர்ந்துவிட்ட பெண்ணுக்கு
துணை தேடும் தாயுள்ளம்
கரை சேர்க்கும் வரை
ஏக்கத்துடன் தாயுள்ளம்

பந்தம் அடைந்த பெண்
சிறப்பாய் வாழுமோ என்ற தாயுள்ளம்
வாழும் பெண்ணுக்கு
குழந்தை கிட்டுமோ என்ற தாயுள்ளம்

அடைந்த கணவன்
நற்குணமுள்ளவனா என்ற தாயுள்ளம்
நன்றாய் வாழ்ந்து விட்டால்
சேர்ந்தே மரிப்பானா என்ற தாயுள்ளம்

அந்தம்முதல் ஆதிவரை
ஆரவார வாழ்கையுடன்
மனம் நிறைந்த கேள்விகளை
ஜெயிக்கும் பெண்மைக்கு
ஏது விதிவிலக்கு........

நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்


வெள்ளி, 18 ஜூன், 2010

முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 012

---------- Forwarded message ----------
From: mugesh ind <mugeshind@gmail.com>
Date: 2010/6/18
Subject: katturai potti - Murugesan
To: admin@sivastar.net


ஈகரை அன்பர்களுக்கு வணக்கம். நான் இந்த கட்டுரை போட்டியில் பங்குகொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே என்னால் எழுதப்பட்ட இந்த கட்டுரையை தங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். எனது கட்டுரைக்கான விமர்சனங்களை தங்களிடம் இருந்து ஆவலுடன் எதிபார்க்கிறேன்.

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி. தமிழ்நாடு.


முன்னுரை:

வான் புகழ் வள்ளுவர் பிறந்த நம் தமிழகம்தான் நாகரீகத்தில் உலகின் முன்னோடியாய் திகழ்ந்தது ஒரு காலத்தில். இன்றும்தான்... குடும்பம் என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கே கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். நமது இந்திய தேசம் மட்டுமே கூட்டுக் குடும்பத்திற்கு பெயர்பெற்றது. அப்படிப்பட்ட கூட்டுக்குடும்ப முறை இன்று நம் சந்ததியினர் ஏட்டில் மட்டுமே படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதற்கான காரணம் தான் என்ன என்பதை காணும்போதுதான் முதியோர் இல்லங்கள் பெருக காரணம் என்ன என்பதன் விடை கிடைக்கிறது.


முதியோர் என்பவர்கள் யார்?

முதியோர்கள் என்பவர்கள், இன்றைய இளையசமுதாயத்தினரே நாளைய முதியோர்களாக வருகிறார்கள். ஒரு தந்தையால் தூக்கி வளர்க்கப்பட்ட மகன் தனது தந்தையின் செயல்களை கூர்ந்து நோக்குகிறான். அந்த தந்தையின் செயல் வடிவிலேயே அந்த மகனும் வளர்கிறான். தனது தந்தை செய்யும் செயல்களை நன்றாக கவனிக்கின்றான். நாம் நமது தாய் தந்தையை கவனிக்காது விட்டால் நம் பிள்ளைகள் கண்டிப்பாக நம்மை வயது முதிர்ந்த காலத்தில் கவனிக்க மாட்டார்கள் என்பதே உண்மை.


காலமாற்றம்:

இன்றில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் வளராத காலம். அந்த காலத்தைவிட தற்போது முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படும் முதியோர்களின் விழுக்காடு மிகவும் அதிகரித்துள்ளது. காரணம் தொலைகாட்சி பெட்டிகளில் வரும் மக்களை சீர்குலைக்கும் நாடகங்களே என்றால் அது மிகை அல்ல. குடும்பப் பெண்களையே குறி வைத்து எடுக்கப்படும் தமிழ் நாடகங்கள் ஒரு நல்ல குடும்பத்தயே சீரழித்து விடுகிறது. முன்பெல்லாம் நாம் தொலை பேசியில் பேசும்போது வீட்டில் குழந்தைகள் யாரவது போனை எடுப்பார்கள். போன் பேசுபவர் "தம்பி நான் மாமா பேசுகிறேன் நல்ல இருக்கிறாயா? அப்பா இருக்காங்களா?" என்றெல்லாம் பேசுவார்கள். அதே போன்று குடும்பத்தில் உள்ள அனைவர்களிடமும் பேசிவிட்டுத்தான் போனை வைப்பார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்களின் சொந்தம் பந்தம் வளர்கிறது. கோடை விடுமுறைகளில் பிள்ளைகளை சொந்த ஊருக்கும், சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் அனுப்பி வைப்பார்கள். விடுமுறை முடிந்து திரும்பும்போது கண்ணீருடன் விடைபெறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் விருந்தினர் வந்தால் எத்தனை நாள் தங்குவீர்கள்? எப்போது போவீர்கள்? என்ற வினாக்களே வருகின்றன. மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை செய்யவேண்டும். ஏனெனில் விருந்தோம்பல் என்பது தமிழனின் இரத்தத்தில் கலந்த ஒன்று. அப்படிப்பட்ட தமிழர்கள் முதியோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் எண்ணம் வரலாமா? கூடவே கூடாது...


விலைவாசி:

மட்டற்ற விலைவாசி ஏற்றம் இன்றைய மக்களை மிகவும் வாட்டி வதைக்கிறது. முதியோர் இல்லங்களுக்கு பெற்றவர்கள் அனுப்பப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். பசி என்ற ஒன்றும் தனக்கென ஒரு துணையும் (மனைவி அல்லது கணவன் அதாவது வயிற்றுப் பசி மற்றொன்று உடல் பசி ) இருப்பதனால்தான் உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு போராடுகிறான். இவைகள் இரண்டும் இல்லையென்றால் உலகம் பாறையாக மாறிவிடும். அப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனின் வருமானம் போதுமானதாக இல்லாவிட்டால் அந்த குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பமாகிவிடும். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முதியோர்களே! ஆனால் முதியோர்கள் தங்கள் கையில் பணமோ அல்லது சொத்துக்களோ இருப்பின் அவர்களின் நிலைமையே வேறு! அரசாங்கம் விலைவாசியை குறைத்தாலே நடுத்தர மக்கள் வாழ்க்கையில் ஒழி வீசும்.


வியாபாரம்:

இந்த நவீன காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக எப்படிஎல்லமோ சிந்திக்கிறார்கள். அரசு உத்தரவுடன் ஆரம்பிக்கப்படும் முதியோர் இல்லங்கள் ஒருபக்கம் வெளிநாட்டு பணத்தைக்கொண்டு ஆரம்பிக்கப்படும் இல்லங்கள், சுய லாபத்திற்காக ஆரம்பிக்கப்படும் இல்லங்கள் என எத்தனயோ வழிகளில் ஆரம்பிக்கப்படுகின்றன. தாய் தகப்பனை கடைசி காலத்தில் கவனிக்காமல் இருப்பது சட்ட விரோதம் என்று அரசு அறிவித்தும், தான் கொடுமைப்படுத்தப் படுகிறோம் என்று எந்த பெற்றோரும் தான் பிள்ளைகள் மீது புகார் செய்வதில்லை. ஏனென்றால் பெற்ற பாசம். ஆனால் அது பிள்ளைகளுக்கு இல்லையே! கேட்டால் அது குடும்ப சூழ்நிலை நான் என்ன செய்வது என்கிறார்கள். இருக்கிற விலைவாசியில் நங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகைகூட செலுத்துவதற்கு சிரமப்படுகிறோம். எங்களுக்கே எங்கள் வீடு போதுமானதாக இல்லை. என்ன செய்வது! அதனால்தான் அப்பாவை சுதந்திரமாக இருக்கட்டும் என்று முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன் என்று சொல்லும் எத்தனை பேர்களை பார்க்கிறோம். வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்படும் முதியோர் இல்லங்கள் கவர்சிகரமாக விளம்பரம் செய்கிறார்கள். சிறிய குழப்பத்தில் இருப்பவர்கள் கூட உடனே அதுதான் சரி என்று பெற்றவர்களை உடனடியாக முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள்.


விழிப்புணர்ச்சி:

சமுதாயத்தில் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை அரசே முன்னின்று செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தனது இளமை பருவத்தில் பட்ட அவதிகளை (நல்லவற்றுக்கானது மட்டும் ) தனது பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். பணத்தின் அருமை, அவதி என்றால் என்ன? உறவினர்கள் யார்? மற்றவர்களுக்கு நாம் எப்படி மரியாதையை செலுத்தவேண்டும்? நட்பு, அன்பு,பாசம் போன்றவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்களை நாம் குறை கூறி என்ன பயன்? தென்னை மரத்தை நட்டால் இளநீர்தான் கிடைக்கும். ஆகவே நமது குழந்தைகளை தென்னம் பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். தமிழில் ரோஜாவனம் என்றொரு திரைப்படம். மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட ஒரு படம். இது போன்ற சமூக சிந்தனையுடன் கூடிய பொழுதுபோக்கு படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற குறும் படங்களை எடுத்து வெளியிடவேண்டும். பொது மக்களின் உணர்வுகளை தூண்ட வேண்டும். அப்படியாவது வருங்கால சந்ததியினருக்கு பந்த பாசத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்:

விலைவாசி ஏற்றமும், அரசியல்வாதிகளின் சுயநலங்களும் சாதாரண மக்களை மிகவும் தினரச்செய்கின்றன. ஆகவே ஒரு நபரின் வருமானம் பற்றாக்குறையாகி குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலையில் தங்கள் பெற்ற பிஞ்சி குழந்தைகளை கான்வென்ட், அங்கன்வாடிகளில் விட்டுவிட்டு வேலைக்கு ஓடுகிறார்கள். பாவம் அந்த குழந்தைகள்.

நமது ஊர்களில் "குளுவார்கள்" என்ற நாடோடி கூட்டத்தை பார்க்கலாம். அவர்களை நரிகுறவர்கள் என்றும் அழைப்பதுண்டு. நாகரீகத்தை சிறிதும் அறியாதவர்கள். கல்விக்கூடங்களே அவர்கள் செல்வதில்லை. ஆனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை இன்றும் மிக மிக மகிழ்ச்சியுடன் கழிப்பவர்கள் அவர்களேயன்றி வேறு யாரும் இல்லை என்பதே உண்மை. அவர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் உடம்பிலேயே தொட்டில் கட்டி நடந்து செல்வார்கள். அதுபோன்று நாகரீகம் தெரிந்த நாம் இல்லாவிட்டாலும் நாம் குழந்தைகளுக்கு பாசத்தை ஊட்டுங்கள். பிற்காலத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் சந்தோசமாக பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே உங்கள் குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை செலவிடுங்கள்.

முடிவுரை:

இந்த உலகம் தோன்றி எத்தனயோ கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எத்தனையோ கோடி ஆண்டுகள் இந்த உலகம் இருக்கலாம். இருந்தபோதிலும் மனிதனின் வாழ்க்கை என்னவோ சுமார் எழுபது ஆண்டுகள்தான். இதில் 35 ஆண்டுகள் தூங்கி கழிக்கிறோம். பதினைந்து ஆண்டுகள் விபரம் அறியாதவர்களாக இருக்கிறோம். மீதம் இருப்பது இருபது ஆண்டுகள். இதில் அறுபது வயது முதல் எழுபது வயது வாழ்க்கை ஏதோவாழ்கிறோம் என்ற நிலைதான். உண்மையான வாழ்க்கை பத்தே பத்து ஆண்டுகள்தான். இந்த பத்து ஆண்டுகளை நன்றாக வாழ்வோம் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுக்க வேண்டும். சங்ககால தமிழ்க் குடும்பங்களைப்போல வாழ்ந்திட ஆசைப்படுவோம். முதியோர்கள் நம்மை பெற்றவர்கள். நமக்கு வழிகாட்டிகள். அவர்கள் நடப்பில் குழந்தைக்கு சமமானவர்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று நாம் முன்னோர்கள் சொல்லிச் சென்றதை நாம் மறந்து விடல் கூடாது.

அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!.. 029

---------- Forwarded message ----------
From: sara karthik <saralafromkovai@gmail.com>
Date: 2010/6/18
Subject: அடங்கி வாழும் பெண்ணினம் ஆர்பரிக்கும் ஆணினம்
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம் ஆர்பரிக்கும் ஆணினம்
உலகை அடைகாக்கும் அன்னை -அவள்
உனக்கு உருவத்தையும் உயிரையும்
கொடுத்த பிரமனின் வடிவம்
அமைதியான பேராழி - அவள்
என ஆர்பரிக்காதே அலைகடலென
கொதிதெளுந்தால் மூழ்கிவிடுவாய் அவளுக்குள்
மென்மையின் சிகரமென நினைத்து - அவள்
மேனியை சிதைக்க நினைக்காதே
எரிமலையாய் எழுந்து எரித்துவிடுவாள்
அன்பென்னும் அறவதிற்குள் - அவள்
கண்டுங்கு கிடக்கிறாள் சீண்ட நினைத்தால்
சீரிடுவாள் அறவமாய்...
பொறுமையின் பிறப்பிடம் - அவள்
வலிமையின் இருப்பிடம் அவளின்
அன்பிற்கு அடைக்கலம்
அன்பு கையிற்றால் கட்டும்வரை - அவள்
அடக்கத்தின் உருவாய்
அன்பின் வடிவாய் இருப்பாள்
உன் அன்பு கயிறு அறுபடும்போது - அவள்
சுனாமியின் சீற்றமாகி பூகம்ப பிளவாகி
எரிமலை குழம்பாகி எமனின் உருவாகிவிடுவாள்
கோவை மு. சரளாதேவி
9789189444

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? 011

---------- Forwarded message ----------
From: Best Wishes <best_wishes@ymail.com>
Date: 2010/6/18
Subject: sending a composition..
To: admin@sivastar.net


அன்பை மறந்தமையால்,

தாய்தந்தையின் வளர்ப்பு கடமை என எண்ணியதால்,

பணிவுடன் மரியாதை செலுத்த தேவையில்லை என ஒதுங்கியதால்,

நற்பண்பே இல்லாததால்,

சுயநலம் பெருகியதால்,

சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்,

நேரமின்மை என்ற காரணத்தால்,

நேராக பார்க்க மறுக்கும் மனதால் என இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.இவை சமீபத்தில் "அன்பகம்" என்னும் முதியோர் இல்லத்தில் நானும் உணர்ந்தது.

பிறப்பும் இறப்பும்:-

ஒரு குழந்தை பிறந்தவுடன் அத்தாயும் தந்தையும் இப்பூவலகில் பெற்ற இன்பத்திற்கு ஈடு இணையில்லை.அப்படி சீராட்டி பாராட்டி வளர்ந்த பிள்ளை தங்களை மறந்தது அவர் தம் விதி என்றாலும் இறுதி மூச்சு அடங்கும் போது தன் பிள்ளையை பார்க்க வேண்டும் என பெற்றோர் மனம் ஏங்கும் என்பதால் மூதியோர் இல்லத்திலிருந்து அழைத்த மேலாளரிடம் மறுப்பு தெரிவிக்கும் மகன்..

மேலும் மேலாளர் கடைசியாக இம்முறை மட்டும் வந்து செல்லவும் என மன்றாடும் அவலம்...

எனினும் வந்து பார்க்க மறுத்த தன் பெற்றோருக்கு கடைசி காரியத்தை செய்ய மறுத்த இம்மனிதம் வாழ்வது முறையோ...

அனைத்து வசதிகள் இருந்தும் பெற்ற பிள்ளையின் அன்புக்காக ஏங்கும் உள்ளங்களை அறியா பிறவியை என்னவென்று சொல்வது?

பணமும் வேலையும்:-



தன்னை படிக்க வைத்த போது பெற்றோர் செய்தது கடமையாக எண்ணும் மகன்,வேலைக்கு சென்றவுடன்..."பணம்" என்பது "மனம்" என்பதனை மாற செய்துவிட்ட விந்தை தானோ..

சுயநலம் என்ற தன் வாழ்க்கை..தன் குடும்பம்... என பிரிகிறது.அங்கே பெற்றோர் முதியோர் ஆகின்றனர்.

பந்தமும் பாசமும்:-

பார்த்து பார்த்து வளர்த்த தாயின் முகத்தை பாராமல் இருப்பது பந்தமும் பாசமும் மறந்ததாலோ..

இங்கு இறைவனிடம் பாடும் போது....

"சித்ராவதி தீர வாஸிராம்

ப்ரபு பர்த்தி புரீஸ்வர ஸாயிராம்

காருண்ய மூர்த்தியாம் சாய்ராம்

கனகாம்பர தாரிணி வாசிராம்

கஷ்டங்கள் தீர்க்கும் கலியுகவரதா..

கற்பகமாகும் உன் திருக்கரங்கள்

எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன்...(உனை)

எங்கேங்கு சென்று நான் தேடுவேன்

பண்ணிசைத்து உன்புகழ் பாடுவேன்

பாராமுகம் இது ஞாயாமா...

கோடி கோடி தவம் செய்தேனோ..(உந்தன்)

கோலம் காண்பேன் எந்தன் வாழ்விலே

தேடக்கிடைகாத செல்வமே

தேவாதி தேவனே நாராயணா......" என்ற பாடலை நினைவு படுத்தியது.இதில் ஒரு தாயும் தந்தையும் தன் மகனை பிரிந்து முதியோர் இல்லத்தில் இருப்பதன் ஏக்கமாக அமைந்தாக சில இந்த பாடலில் உள்ள வரிகள் நம்மால் உணர இயலும்.

சுயநலமும் சூழ்நிலையும்:-

சுயநலமாக தன் குழந்தையை வளர்க்க தாத்தாவும் பாட்டியும் தேவை...அக்குழ்ந்தை வளர்ந்தவுடன் இம்மாதிரி இல்லங்களில் அனுப்பும் இந்த இழிவு நிலை என்று மாறுமோ....அன்று தான் மனிதன் முழுமை பெறுகிறான்.நன்றி மாறாவதன் ஆகின்றான்.

சுயசிந்தனை:-

பிள்ளையின் பெயர் சொல்லி அழைக்க மறுத்த பெற்றோர்,

சொல்லி அழைக்க வைத்த செல்ல பெயர்கள் தாம் ஏராளம்.

ஆனால் பிள்ளையால் கைவிடப்பட்ட பெற்றோர் அடுத்த வினாடியே ஆதரவற்ற முதியோர்கள் என்றே அழைக்கபடுகிறார்கள்.

ஆறாவது அறிவை ஆண்டவன் அளித்தும் ஆதரவற்றவர்களாக ஆக்குப்படுவது சுயசிந்தனை இல்லாததாலோ?

தன் மகனோ/மகளோ அப்பாவின் இனிஷியல் அறியாத போது தாத்தாவின் பெயர் கேட்டால் அறியாமல் இருப்பது இக்காலத்தில் நிகழ்கிறது என்பது யதார்த்தம்.

காரணம் அருகாமையில் இல்லாதது,பார்க்க நேரமில்லை,வளர்ப்பு,சூழ்நிலை,பிள்ளைகளிடம் பெற்றோரை பற்றி தெரிய வைக்காமல் இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

முதியோர் இல்லம்:-

அவர்கள் அங்கு சுகமாய் இருந்தாலும்,மாறாத மனக்கவலை இப்படி எனக்கா? நிகழ்ந்தது! என அவர்களே தங்களுக்குள் சமாதானம் ஆகமுடியாத ஓர் இடமாக தான் கருதப்படுகிறது.எனினும் மறந்து வாழ முயற்சி செய்ய நடைமுறை அவர்களை தள்ளியது.

தன் மகன் வரவில்லை எனினும் மகன் /மகள் வயதில் உள்ளவர்கள் வந்து பார்த்து செல்வதில் த்ருப்தி அடைகிறார்கள்.

அன்போட பேசி பழகி வாழ்த்துக்கூறி இல்லம் தன்னில் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கும் அவ்வன்பு உள்ளங்களில் நாமும் இடம் பெறுவோம்.

முடிந்தவரை வேண்டியதை செய்திடுவோம்.

வாழ்வில் உன்னதமாய் உயர்வோம்.

அன்பு இருக்கும் மனமதை

அன்பாய் எந்நாளும் போற்றிடுவோம்..

முதியோர் இல்லங்களில் சென்று ஆறுதலாய் பேசிடுவோம்.அவர்களின் மனதை புரிந்து நடந்துக் கொள்ள முயற்சி செய்வோம்.வாழும் போதே மரியாதை செலுத்துவோம்.ஒரு முறையாவது சென்று வருவோம் என உறுதியினை எடுப்போம்.

நமக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காக சென்று வருவோம்.அவர்களின் வாழ்வில் நடந்ததை நம்மோடு பகிர்ந்து கொள்வதில் நாம் அவர்களை ஒரு விதத்தில் சந்தோஷம் அடைய செய்கிறோம்.ஆகையால் நம்மால் முடிந்தவரையில்

நல்ல முறையில் காப்போம்.எந்த நாளும் நாம் நலம் பெறுவோம்.

நன்றி.

வியாழன், 17 ஜூன், 2010

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன 010

---------- Forwarded message ----------
From: Sumathi <krishnaamma.sa@gmail.com>
Date: 2010/6/17
Subject: katturai poti
To: admin@sivastar.net

பெண் சிசு கொலை ..........சொல்லும் போதே கஷ்டமாக உள்ளது. எப்படித்தான் 10 மாதம் சுமந்து பெற்றதை கொல்ல மனம் வருதோ? அதுவும் கொல்வது பெற்றதாய் தந்தையே.........அதற்கு அவர்கள் கூறும் காரணத்தை கேட்டால் எனக்கு கோபம் சிரிப்பு ரெண்டும் வரும்.

முதல் காரணம், அந்த தாய் "அதுவும் என்னைப்போல் கஷ்டபடவேண்டாமே என் கொன்றேன் " . என் சொல்வாள். ஏதோ இவமட்டும் தான் இந்த உலகத்தில் கஷ்டபடுவது மாதிரியும், மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் மிதப்பது மாதிரியும். இது எனக்கு ஏளன சிரிப்பை வரவழைக்கும். அப்ப, பையன் பிறந்தால் மட்டும் கஷ்டமே இல்லையா? அவன் வளர்ந்ததும் பெண் கிடைகாமல் கஷ்டபட்டால் பரவைல்ல்லையா? இவ மாதிரி எல்லாரும் பெண் குழந்தை களை கொன்னுடா, யாரை அவ பிள்ளை கல்யாணம் பண்ணுவது? அப்ப, வேறயாராவது ஒருத்தி இவ பிள்ளைகாக பெண் பெற்று வளர்க்கணும். என ஒரு சுயநலம்?

அந்த அப்பாவை கேட்டால், அவன் சொலுவான் , "வயசான காலத்தில் கஞ்சி ஊத்த ஒரு மகன் தான் வேணும்" என்று. என் பெண் குழந்தைகள் கஞ்சி ஊத்தாதா? ( கருத்தம்மா படம் பாருங்க) ஆனா அவனும் யோசிப்பது இல்லை . இவன் அம்மாவையும் யாரோ பெற்று கஷ்டபட்டு வளர்த்து அனுப்பி இருக்கா , இவன் மனைவியும் யாரோ பெற்று கஷ்டபட்டு வளர்த்து அனுப்பி இருக்கா. இவன் மகனுக்கும் அதேபோல் எதிர் பார்க்கிறான். சோ, சமுகம் தான் இவனுக்கும் இவன் குடும்பதுகும் யாரையாவது அனுப்பி கொண்டே இருக்கணுமே தவிர இவன் யாருக்கும் எதுவும் செய்யமாட்டான்.

only receiving end . ஆனால் நம் சமுகம் என்பது ஒரு தொடர் சங்கிலி போன்றது. நீ ஒருவரிடமிருந்து எதை பெற்றுகொண்டாலும், வேறுஒருவருக்கு அதை தரனும். தந்து தான் ஆகணும். நம் வழி பாடுகள் முதல், கலாசாரம் முதல், அடுத்த தலைமுறைக்கு நாம் தர கடமை பட்டவர்கள் ஆவோம். நடுவே சங்கிலியை முறிக்கும் அதிகாரம் நமக்கு இல்ல.

ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு விவசாயி எப்படி தன் தேவைக்கு மட்டும் உழாமல், மற்றவர்களுக்காகவும் சேற்றில் கால் வைக்கிறான்? ஒருவேளை அவன் தனக்கு மட்டும், தன் தேவைக்கு மட்டும் பயிரிடுவானே ஆனால், நம் அனைவரின் கதி? யார் சாப்பிடபோகிறார்கள் என்று கூட அவனுக்கு தெரியாது. இந்த பயிர் நன்கு விளையுமா? தண்ணி இல்லாமல் வாடுமா? ரொம்பமழை பெய்யுமா? இல்ல புயல் வருமா ? என் யோசிக்காமல் நேரத்தே தன் கடமையை செய்கிறான். இந்த எல்லா தடைகளையும் தாண்டி தான் விளைச்சலை எடுக்கிறான். அப்படி இல்லாமல், மேலே சொன்ன தகப்பன் தாய் போல் , கண்டிப்பா தண்ணிவிட மாட்டான் பக்கத்துக்கு ஊர்காரன், இல்ல 'லைலா' புயல் வந்துரும் அதுவும் இல்லையா, நேரத்துக்கு உரம் கிடைக்காது. இல்ல எல்லாம் மீறி, பயிர் வளர்ந்து டா கூட என்ன பெருசாலாபம் வரபோறது? பேசாம இருந்துடலாம் என்றா இருக்கான்? தன் கடமையை எப்பாடுபட்டாவது செய்கிறான இல்லையா? பின் நமக்குமட்டும் என்ன? என்றோ 18 - 20 வருஷம் கழித்து நடக்கபோகும் பெண்ணின் கல்யாணத்துகாக பயந்து இப்ப கொல்லறாளாம் . வெட்கமாக இல்ல? They are escaping from the problem.

அது வரை இவனே இருப்பானோ மாட்டானோ? நாளைக்கு நடப்பது யாருக்குத் தெரியும்; எதுவுமே நிச்சயமில்லாத இந்த உலகத்தில் ? யாருடைய உபயோகதுகாகவோ நான் என் கஷ்டப்பட்டு வளர்க்கணும் என்கிற சோம்பேறித்தனம் தான் முதல் காரணம். அதை மறைக்க 'கொழந்தை கஷ்டப்படும்' என் பூசி மெழுகல். ஒரு உயரை கொல்லும் அதிகாரம் நமக்கு இல்ல. பல கொலைகளை செய்தவனை கூட நாம் உடனே தூக்கில் போடுவது இல்லையே? அப்படி இருக்க ஒரு பாவமும் அறியாத பச்சை மண்ணை எப்படி கொல்லலாம்?

இதில் ஆணை விட பெண்ணுக்கு தான் அதிக கடமை இருப்பதாக நான் நினைக்கிறன். ஏன்னா சுமந்தது அவள் தானே? ஒரு கோழி கூட தன் குஞ்சுகளை நெருங்கும் பருந்தை கூட எதிர்க்கும். அந்த பருந்து நினைத்தால் கோழியையே தூக்கிடும், அது கோழிக்கும் தெரியும். தன்னை விட வலுவான எதிரி ஆனாலும் தான் பெற்ற குஞ்சுகளுக்காக அது தன் உயிர் உள்ளவரை போராடும்.

இந்த மானிட பெண் அதைவிட கேவலமா? அவளால் தன் கணவன் மாமியாருடன் போராடமுடியாதா? அதுவும் அவள் தனி கூட இல்ல, சட்டம் அவள் பக்கம். வேண்டுமானால் வீதியில் வந்து போராடலாம். இப்ப இனிஷியலுக்கு கூட அபபா பேர் தேவைஇல்ல . அம்மா பேர் போதும். சட்டம் இருக்கு தெரியும் ல? ஜெயலலிதா செய்த நல்லதில் இதுவும் ஒன்று. கொழந்தையை கொல்லசொல்லும் கணவன் - வேண்டாம் என் ஏன் தைரியமாய் ஒரு முடிவு எடுக்க கூடாது ?

நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் சிசு கொலையை தடுக்கணுமே? குழந்தை ஒரு பெண்ணால் வளர்க முடியாதா? கேஸ் போடு, ஜிவனாம்சம் வாங்கணும் என்று நான் சொல்லல. எப்படியும் உன் குடிகார கணவனுக்கு நீதான் மகளிர் சுய உதவி குழு, சித்தாள் வேலை, வீடு வேலை என ஏதோ செய்து பணம் தந்து , அவன் குடியும் உன் குடுததனத்தையும் காப்பாற்றப் போகிறாய் . இதில், குழந்தையை மட்டும் காப்பற்றமுடியாதா? மேலும் அவ்வாறு வெளியே வந்தால் உன் சுய மதிப்பாவது உனக்கு மிஞ்சும். ஆமாம் ,உன் பெண்குழந்தையை கொன்ற அல்லது கொல்ல வைத்த ஆளுடன் மீண்டும் குடும்பம் நடத்தி ( தூ , அது மானம் கேட்ட பொழப்பு ), அவனை போலவே ஒரு ஆணவம் பிடித்த ஆண் குழந்தையை பெற்று என்ன சாதிக்கப் போகிறாய்? பெண் குழந்தையை கொன்றுவிட்டு நிம்மதியாய் துங்கிடுவாயா நீ?

ஒரு பெண்ணே ,பெண் குழந்தையை கொன்று தன் இனத்துக்கே செய்யும் துரோகம் மன்னிக்க முடியாதது. ஒருகாலும் பெண்கள் இதை அனுமதிக்க கூடாது. பெரிய இடங்களில் கரு சிதைவு நடக்கிறது அதற்கும் அனுமதிக்க கூடாது . நம் உடலில் உள்ள உயிரை காப்பது நம் கடமை. பெண்களுக்கு எவ்வளவோ சொலிதரும் அம்மாக்கள் இதையும் சொல்லிதரணும்.

சோ, அடுத்த தலை முறை பெண்களை திட மனது படைத்தவர்களாய், அநியாயத்துக்கு துணை போகாமல் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வளர்க்கணும் அநியாயத்துக்கு துணை போகாமல் இருந்தா மாத்திரம் போறாது, தட்டி கேட்கும் தைரியமும் இருக்கணும். அது போலவே, ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே பெண்ணை மதிக்க கற்று தரணும். பெண் வெறும் போகப்பொருள் இல்ல, உயிர் உணர்ச்சி உடையவள் என்று சொல்லி சொல்லி வளர்க்கணும். இவைதான் சிசு கொலையை தடுக்கும். இது ஒரு ராத்திரியில் மாற்றகூடிய விஷயம் இல்ல. மெல்ல மெல்ல தான் மாறும். நாம் தான் மாற்ற முயலனும்.

See, இதுவும் பெண்ணின் கையில் தான் இருக்கு. இப்படி கையில் இருப்பது எல்லாத்தையும் விட்டு விட்டு வெரும அழுதா காரியம் எப்படி ஆகும்? அகவே நாம் எல்லோரும் சேர்ந்து செயல் படுவோம். நன்றி.