திங்கள், 28 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...! 050

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/28
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
To: admin@sivastar.net


மனிதனாக பிறந்து,
மரத்தை இழந்து
மழையை இழந்து,
உலகத்தை மாசுபடுத்தும்,
நிலையில் நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்,
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

தீவிரவாதத்தில்,தீவிர வாதத்தில்,
இருந்து ,மனிதனே, மனிதன் கொல்லும்
நிலை அறிந்தும், தடுக்க நிலை அறியாமல்,
வேதனையில் நான்,மீண்டும் எனக்கு
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?

துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?என்று !


கலை நிலா !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக