வெள்ளி, 25 ஜூன், 2010

அடங்கி வாழும் பெண்ணின் ஆர்பரிக்கும் ஆண்குணம்! 044

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in



பெண்ணாய் பிறந்தது பெரும் பாவம்
ஏ! பிரம்மாவே !
நீ மட்டும் ஏன் ஆணாய் பிறந்தாய்!

நீ பெண்ணாய் பிறந்திருந்தால்
படைக்கும் தொழிலில்
பெண்ணினமே இல்லாமல்
வேறோடு அழித்திருப்பாய்!

பெண்கள் வீட்டு அடுப்பினில்
எரியும் விறகு கட்டைகள் - இங்கே
விறகாய், கனலாய், கரியாய்
இருந்துப் பயன் கொடுத்தாலும்
சாம்பலாய் ஆனவுடன் சகதியில்
எரிந்துவிடும் இந்த சமூதாயம்!

பொறுப்புகள் சுமக்க நேர்ந்தால்
பெண்மையைப் பாரமென நினைத்து
பொசுக்கி சாம்பல் ஆக்கிவிடும்
இந்த சமூதாயம்!

அடி உதை வாங்கிய
காலத்தில் கூட -இந்த
பெண் மனம் கலங்கியதில்லை!

அதை விட கொடிய வார்த்தை- என்னும்
ஈட்டியால் குத்தி நெஞ்சைப்
பிளப்பது வலிக்கத்தான் செய்கிறது!

அடங்கி நடக்கும் அடிமைகள்-நாங்கள்
எழுந்தால் கொப்பளிக்கும்
சுடுநீர் கடல் கூட எங்கள்
முன் சிதைந்து விடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக