செவ்வாய், 15 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...! 019

---------- Forwarded message ----------
From: Annasamy.V <vas@lntecc.com>
Date: 2010/6/15
Subject: pOtti kavithai
To: "admin@sivastar.net" <admin@sivastar.net>


பிறவி இனி என்றும் வேண்டேன்.
பிறவியெ டுப்பினும் நேயம் மறாவா
மனிதனாய்; அதிலும் புனித மனமொடு
இனிமை, இளமை கொண்டவனாய்...

கொண்ட நற் குணக் குவியலில்
திண்மையாய், வேண்டா சேர்க்கைகள் தீண்டா
வண்ணம் உறுதியாய், வார்த்த இரும்பாக்கிட
ஆண்டவனிடம் முறையீடு செய்வேன்.

எங்கும் எதிலும் அன்பு ஊற்றென
இங்கு உறைவோர் முறுவலில் தங்கிட,
கயமை, பட்னி போன்ற இன்னல்கள்
மாயட்டும்; எடுப்பேன் மறுபிறவி. !!!

---------------------------------------------------------------------

V.Annasamy


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக