திங்கள், 14 ஜூன், 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...! - சபீர்

---------- Forwarded message ----------
From: seenimohamed safeer <rajabasli@gmail.com>
Date: 2010/6/14
Subject: பிரியாத வரமொன்று வேண்டும்...!
To: admin@sivastar.net


சிறுவயதில் நாங்கள் இருவரும்
ஒவ்வொரு நிமிடத்தையும்
சிந்திக்காமல் சந்தித்தோம்
பிரிவு என்றால்
என்னவென்று
அறியாதது எங்கள் உறவு!

அர்த்தமில்லாமல் கடந்த
அன்றாட வாழ்க்கையில்
எங்களை அறியாமல்
எங்களுக்குள்ளே இருந்த ஒன்றுதான்
இந்த துாய்மையான காதல்!

இரத்ததில் ஒன்றுபட்ட
எங்கள் உறவு
இறுதிவரை நிலைத்திருக்கவேண்டும்
என்பதுக்காவோ என்னவோ
எங்கள் உள்மனதில்
மொட்டுவிட்டு மலர்ந்தது
அந்த மூன்றெழுத்து காதல்!

இருவரின் உள்ளங்களில்
ஆசைகளைத்துாண்டிவிட்டு
மலர்ந்து வந்த
அந்த புனிதமான உறவுக்கு
பச்சைகொடிகாட்டியது
எங்கள் உறவுகள்!

தடையேதுமின்றி
சந்தோஷத்தில் மட்டுமே
மிதந்தது எங்கள் உள்ளங்கள்.
அறியாமல் வளர்ந்த எங்களது
இன்பக்காதலின் வயது
இன்றோடு 8 வருடங்களைக்கடந்து
இன்னும் பலவருடங்கள் கடந்திட
இறைவா எங்களுக்கு
பிரியாத வரமொன்றை தந்து விடு....!

அன்புடன்
எஸ்.எம்.சபீர்
தோஹா கத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக