வெள்ளி, 25 ஜூன், 2010

தமிழுக்கும் அமுதென்று பேர்...! 045

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in




தமிழுக்கும் அமுதென்று பேர்.

கவிஞரின் எழுத்தோவியமே!
கலைஞர்கள் பேசும் செவ்வாய்மொழியே!
செவி குளிரவைக்கும் பாட்டே!
செம்மொழியாம் தமிழ் மொழி நீயே!

தவம் புரிந்து பெற்ற தாய்மொழியே!-நிண்
தரிசனம் யான் பெற்ற பேரே!
நாவில் இனிக்கும் தேனே!
நன்மக்களின் நாவில் உதிக்கும் கூற்றே!

பருக பருக திகட்டாத- பேரின்பமே!
பண்பட்ட புலவர் புணையும் கவியே!
மொழியின் தாகம் தணிக்கும் அமுதே!
முக்கனி சுவை தரும் தமிழே!

யாம் பெற்ற இன்பம் - இவ்வுலகில்
யாவரும் பெற்றது எம் பாக்கியமே!
ரத்தத்தில் ஊறிய உணர்வே!-தமிழன்
ரசனை கொண்ட எழுத்தே!

அமுதசுவை அறிந்ததில்லை!-நாங்கள்
என் தாய் மொழியாம் தமிழ் சுவை சுவைக்கயிலே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக