ஞாயிறு, 20 ஜூன், 2010

ஈழம் என்று மலரும் ? 032

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/19
Subject: கவிதைப் போட்டி: ஈழம் என்று மலரும் ?
To: eegaraipoem <admin@sivastar.net>



விதிக்கப்பட்டிருகிறோம்
இந்தக்
கண்ணீர் தேசத்தில்
விடியலே கூடாத
இரவு வாசிகள் என்று.. !

இதோ பாருங்கள்
கயவர்களை,
கல்லறை
கட்டிக்கொண்டிருக்கிறார்கள்
எங்கள்
கண்ணீர்க் குவியலில்.. !
இவர்களின்
இனவெறிக்கு
இரையாய்
மரணிக்கப்படும்
எங்கள் மனிதர்கள்.. !
நீதியை விடவும்
எங்கள்
உயிர்களின் மீதியே
இவர்களுக்குத் தேவை.. !

ஆம், இங்கே
வாதிகள் எவரும்
வாதங்களை
வைப்பதில்லை
தீவிரவாதத்தைத்தான்.. !

நகர மறுக்கிறது
எம் நாட்கள்
பிணச்சுமையும்
மனச்சுமையும்
கூடிப் போனதில்..!
அவர்களின்
இனப்போராட்டத்தில்
தாங்க முடியவில்லை
எங்கள்
மனப்போராட்டங்களை..
கேட்டுச் சொல்லுங்கள்
தயவுசெய்து
யாரிடமேனும்
என்று மலரும்
எங்கள்
ஈழம் என்று.. !
- நியாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக