திங்கள், 28 ஜூன், 2010

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 052

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/28
Subject: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!( போட்டிக்கவிதை ..)
To: admin@sivastar.net


ஈழம்!
இறந்தவர்களின் கனவு,
இரத்தத்தை,உறவுகளின்
உயிர்களை,இழந்தவர்களின்,
உணர்வானது!

தோல்வியே ,கருவாகி
களம் காண வழியானது,
மானத்தை காக்கும்
கவசமாகியது!

வரும் சுதந்திரம்,கிடைக்கும்
அதிகாரம்,என்று மண்ணுக்குள்
புதைந்த விதைகள், மரமாகும்,
மீண்டும் மலரும் ஈழம்.

நகைக்கும் கூட்டமே!
வரலாறு பாருங்கள்!
சுதந்திரப் போராட்டம்,
எல்லாம் உடனே கிடைக்கவில்லை,
கிடைத்ததில்லை!

ஆதிக்கவெறியர்கள் எல்லாம்,
அழிந்தததை இந்திய
வரலாறு சொல்லும்,
1947 ஆண்டை பார்த்தால்
விடை தெரியும்!
நம்பிக்கைக்கொள்ளும்!

நம்பிக்கையே வாழ்க்கை.
நாளை மலரும் ஈழம் என்பதை,
நாளும் எண்ணும் மனதை,
மறக்கமாட்டோம்,
ஈழத்தில்,சுதந்திர
தமிழ்க் காற்றில் எங்கள்
சுவாசம், சுவாசிக்காமல் விடமாட்டோம்!

உறுதியான உயில் இது
உயிராகி,உரமாகி போனது.
உயிர் போனாலும் ,
உறவுக்கு, ஈழம் கிடைக்கும்,
கிடைக்க புது தலைமை பிறக்கும்!
வலிகள் போக்க,வழிகள்,
கிடைக்கும் ,புது இல்லம் கிடைக்கும்
ஈழத்தில் சுவாசிக்கும்.


கலைநிலா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக