திங்கள், 21 ஜூன், 2010

பிரியாத வரம் வேண்டும்! 033

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/22
Subject: கவிதைப் போட்டி : பிரியாத வரம் வேண்டும்
To: eegaraipoem <admin@sivastar.net>



பிரியாத வரம் வேண்டும்

ஜனனம் முதல்
ஜாதி
மதப் பிரிவினைகள்
மரணம் வரை

மதம்
பிடித்துப் போனதில்
மதம்பிடித்துப்
போகிறது
இந்த
மனிதர்களுக்கு

சாதிகள் கூட
சாக்கடைதான்
உரைக்கவில்லை

இவர்களுக்கு

உள்ளத்திலும்
உதிரத்திலும்
ஊறிப்போனதில்

மனிதனையும்
மனதினையும்
விடவும்
பிரிவுகள் தான்
பெரிதா ?
புரிவதில்லை
இந்தப்
பிரிவினை
வாதிகளுக்கு

தொட்ட
இடமெல்லாம்
கொட்டிக்கிடக்கின்றன
பிணக்குகளும்
பிரிவுகளும்

என்ன
கண்டுவிட்டோம்
பிரிந்து பிரிந்து
நின்று

கொஞ்சம்
தள்ளிவைத்து
பார்ப்போம்
அத்தனை
பிரிவுகளையும்
நம்
பிணக்குகளையும்
கூடி நின்று.

- நியாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக