திங்கள், 14 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...! சம்ஸ்

---------- Forwarded message ----------
From: eegarai niflath <shamsuniflath@gmail.com>
Date: 2010/6/15
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
To: admin@sivastar.net


காலையில் எழுந்து
கதிரவனைப் பாராது
பிஞ்சுகளின் பிணத்திலும்
வீருட்டோடும் இரத்தத்திலும்
பார்த்துத்தவித்த பாழான
அரக்கன் குடியிருந்த
வாழ்வின் நொடிகள் போதுமடா

ஆறறிவு அரசனும்
முப்படை முட்டாள்களும்
முண்டியடித்து அதரப்பதற விரட்டி
ஒட விட்டு பின்னுதைத்ததை
பசுமரத்தாணியாய் பதிந்து
படுக்கையிலும் பதறும்
பாழான இந்தபப்பிறவியில்
பரிதவித்தது போதுமடா


கொடியவரின் பிடியில்
கொடுங்கோலாட்சியில்
சிக்கிச் சிதறி அழுதழுது
துன்பமே துயராக தொடர்ந்த
துர்பாக்கிய வாழ்வுடன்
இனியும் ஒரு பிறவி வேண்டாமடா

என்னழுகை கேளாமல்
என்னருமை பாராமல்
கொண்டாடிச் சிரிக்கும்
கேவலங்கெட்ட மானிடம்
வாழும் இன்னொரு பிறவி
எப்போதுமே வேண்டாமடா

சம்சுதீன்
ஈகரை தமிழ் களஞ்சியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக