செவ்வாய், 15 ஜூன், 2010

ஈழம் என்று மலரும்? 023

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/16
Subject: ஈழம் என்று மலரும்?
To: admin@sivastar.net




சொற்ப வாழ்வில்
சோகங்கள் சுமைகளாக
வேண்டும் தேவைகள்
நிறைவடையா ஆசைகளாக

நிறைந்த வாழ்வு
நிம்மதியாய் வாழ
வேண்டும் ஈழம் என்றே உரைக்க
இருந்ததையும் இழந்த பரிதாப நிலை

சொந்த மண் மறுத்த ஜென்மங்கள்
சொரிந்த குண்டு மழையில்
இரத்த ஆறுகளில் தினமும் குளிக்க
சின்னா பின்னமான ஈழக்கனவு

வாழ்வைத்தேடி அலையும்
வறிய வாழ்க்கையுடன்
வயிற்றுள் சிசுக்களும்
மலருமா ஈழம் என்றுதான் கேட்கிறது

மலரும் மலருமென்று
உரக்கக்கூறி பிரிந்து நின்று
மலரச்செய்ய முடியாத ஈழம்
சேர்க்க வேண்டிய உணர்வுளோடு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வென
உலகமே பறைசாற்ற
தமிழ் ஒற்றுமையில் உலகையாழ
மலரா ஈழமும் மலரும் இனிதே.......


நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக