திங்கள், 14 ஜூன், 2010

அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/14
Subject: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!
To: admin@sivastar.net


ஆணால் ஆணைப்பெற்ற
பெண்ணானவள்
அற்புதப்படைப்பின்
அகிலம் வெண்றவள்

இன்பத்தின் உறைவிடம்
பாசத்தின் விழைநிலம்
பெண ஈர்ப்புவிசை
விதிகளின் இறுதிநிலை

ஆணையே ஏந்தும் அகிலமிவள்
பெண் இன்றிய உலகமும்
பெண் அற்ற உறவும்
வறண்ட நிலத்தில் விதைப்பதுபோல்

எல்லாமே பெண்ணாக இருந்தும்
அவள் கொண்ட அருங் குணத்தில்
ஆணுக்கு வழிவிட்டு
பின்னே இவள் நடக்கிறாள்

மதிப்பிற்குரியவளை
மார்தட்டும் சிறந்தவளை
சம அந்தஸ்தேனும்
மறுக்கின்ற ஆண்குணம்

பெண் என்றால் பணிவிடைக்கும்
தன்தேவை நிறைவுக்கும்
தயங்காமல் தட்டிப்பணிக்கும்
தயவற்ற ஆண்குணங்கள்

பெண்குலம் போற்றவேனும்
பெண்மனம் குளிரச்செய்ய
ஆர்ப்பரிக்கும் குணம்தவிர்த்து
உன்னாலானமட்டும்
ஒவ்வாமை நாடாதிரு


நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக