ஞாயிறு, 27 ஜூன், 2010

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 048

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/28
Subject: கவிதைப் போட்டி
To: admin@sivastar.net



கோழையே...........
கொன்றது நீ வெல்வது நாம்
எம் மௌனம் வானத்தை இடித்து
மின்னலாய் வந்து விழும். அப்போ
உன் தலை தெறிக்கும்.
புலி உயிர்த்தஞ்சம் கேட்டதில்லை
சாவுக்குப் பயந்ததில்லை
யாருக்கும் அடிமையில்லை
பகையென்றால் விடுவதில்லை
மண்டியிட்டால் தொடுவதில்லை
குழிபறித்தால் மன்னிப்புக்கு இடமில்லை
கூடவே இருந்துவிட்டால்
யாருக்குமே அச்சமில்லை.

உன் நெஞ்சுக்கு துணிவிருந்தால்
நேருக்குநேர் நின்றுபார்.
உயிர்தப்பி ஓடினோர் எத்தனை பேர்
அவர்களை கேட்டுப்பார்.
யாரடா நீ எனக்கு வேலிபோட
ஏனிந்த மௌனமென பொறுத்திருந்துபார்
நாளைக்கு நீ எம் எல்லையில் காவல்நிற்பாய்.

புலிக்கொடி வானில் பறந்து
வான்முகிலை அதட்டிப்பேசும்
இடிமின்னலும் அடங்கிப்போகும்
நாம் காத்திருப்பது காலத்தின் பிச்சைக்காகவல்ல.
எம் தலைவனின் வார்த்தைக்காக. அவன்
வார்த்தை எம் சுதந்திரத்தின் திறவுகோல்
அதுவரை நாம் ஓய்வதுமில்லை சோர்வதுமில்லை.
இது தமிழ்த்தாய் மண்மீது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக