ஞாயிறு, 20 ஜூன், 2010

பெண்ணுக்குள் பூகம்பம்...! 030

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/19
Subject: பெண்ணுக்குள் பூகம்பம்...!
To: admin@sivastar.net


பெண்ணுக்குள் பூகம்பம்...!

பெண் பிறந்ததால்
மனம் சோர்ந்த தாயுள்ளம்
பெண்ணை வளர்த்தெடுக்க
பெண்காப்பில் தாயுள்ளம்

பள்ளி சென்ற மகள்
பாதை மாறுமா எனும் தாயுள்ளம்
வேலை சென்ற மகள்
வீடு சேருமா எனும் தாயுள்ளம்

வளர்ந்துவிட்ட பெண்ணுக்கு
துணை தேடும் தாயுள்ளம்
கரை சேர்க்கும் வரை
ஏக்கத்துடன் தாயுள்ளம்

பந்தம் அடைந்த பெண்
சிறப்பாய் வாழுமோ என்ற தாயுள்ளம்
வாழும் பெண்ணுக்கு
குழந்தை கிட்டுமோ என்ற தாயுள்ளம்

அடைந்த கணவன்
நற்குணமுள்ளவனா என்ற தாயுள்ளம்
நன்றாய் வாழ்ந்து விட்டால்
சேர்ந்தே மரிப்பானா என்ற தாயுள்ளம்

அந்தம்முதல் ஆதிவரை
ஆரவார வாழ்கையுடன்
மனம் நிறைந்த கேள்விகளை
ஜெயிக்கும் பெண்மைக்கு
ஏது விதிவிலக்கு........

நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக