---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/24
Subject: கவிதைப் போட்டி: தமிழுக்கு அமுதென்று பேர்
To: eegaraipoem <admin@sivastar.net>
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/24
Subject: கவிதைப் போட்டி: தமிழுக்கு அமுதென்று பேர்
To: eegaraipoem <admin@sivastar.net>
முக்கனியொடு
தேனென
நாவினில்
இனிக்கிறாய்
நற்றமிழே !
முத்தெனும்
முத்தமிழும்
வள்ளுவன்
முப்பாலும்
வழங்கிய நின்
கொடையே !
தாய்ப்பாலொடு
கூட்டியே
ஊட்டினள்
அன்னை அன்பில்
தமிழெனும்
அமுதும் !
உனை
வாழ்த்திட நல்
வார்த்தைகள்
கோர்த்து நின்
பாதங்கள்
சேர்க்கிறேன் !
முகிற்தனில்
மதியாய் நின்
முகம்தரு ஒளியே
அந்நியம் அழிக்கிறேன்
புண்ணியம் சேர்க்கிறேன்
உன்னிசை பாடியே !
நின்
வதனமதில்
கூடிய
வளமெலாம்
வாழ கோடி
வாழ்த்துவம்
உலகெலாம்
உயிர்த்தமிழ்
உணர்த்துவம் !
- நியாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக