வியாழன், 24 ஜூன், 2010

தமிழுக்கு அமுதென்று பேர் ! 038

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/24
Subject: கவிதைப் போட்டி: தமிழுக்கு அமுதென்று பேர்
To: eegaraipoem <admin@sivastar.net>


முக்கனியொடு
தேனென
நாவினில்
இனிக்கிறாய்
நற்றமிழே !

முத்தெனும்
முத்தமிழும்
வள்ளுவன்
முப்பாலும்
வழங்கிய நின்
கொடையே !

தாய்ப்பாலொடு
கூட்டியே
ஊட்டினள்
அன்னை அன்பில்
தமிழெனும்
அமுதும் !

உனை
வாழ்த்திட நல்
வார்த்தைகள்
கோர்த்து நின்
பாதங்கள்
சேர்க்கிறேன் !

முகிற்தனில்
மதியாய் நின்
முகம்தரு ஒளியே
அந்நியம் அழிக்கிறேன்
புண்ணியம் சேர்க்கிறேன்
உன்னிசை பாடியே !

நின்
வதனமதில்
கூடிய
வளமெலாம்
வாழ கோடி
வாழ்த்துவம்
உலகெலாம்
உயிர்த்தமிழ்
உணர்த்துவம் !

- நியாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக