திங்கள், 28 ஜூன், 2010

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 056

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!


ஆண் பிறந்தால் உசத்தி
பெண் பிறந்தால் தாழ்த்தி என்று
உன்னை கருவினிலும் சிசுவினிலும்
கொன்றுவிடும்

ஆணும் பெண்ணும் சமமென்று
ஏட்டளவில் எழுதிவைத்து - அதை
ஏட்டுக்கனியாய் நினைத்து
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மறுத்து
திறமைக்கேத்த பதவியை தடுத்து உன்னை
சீண்டுவதில் சிற்றின்பம் காணும்
பெண்டாள நினைக்கும் சண்டாளராய்
இருக்குதடி ஒரு கூட்டம்

மாலையிட்டு தாலிக்கட்டி
வேலி என்று ஆனவன்
குடி பீடி லேடி என்று
பொறுப்பற்று தடம் மாறி போக
வெறுப்புற்று நீயும் அவனை
தட்டி கேட்க துணியும்போது
உன்னை எட்டி உதைத்து
மகிழும் வஞ்சகனாய்
இருக்குதடி ஒரு கூட்டம்

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
நீ அழுதால் நான் அழுவேன் என்று
காதல் மந்திரத்தை உன் காதிலே
தந்திரமாய் ஓதி - உன்னை தன்
இளமை பசிக்கு விருந்தாக்கி பின்
பறந்து செல்லும் பருந்தாக
இருக்குதடி ஒரு கூட்டம்

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா?




--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக