வெள்ளி, 25 ஜூன், 2010

இனியொரு பிறவி வேண்டாம். 046

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in



இனியொரு பிறவி வேண்டாம்.

வீட்டில் வறுமை
நாட்டில் வறுமை!
வறுமையின் வரவால்
வந்தது பகைமை!

பணத்தின் உதவியோடு
சில இன்பத்தை ரசித்து
பல தொல்லைகளைத்
தாங்கிக் கொண்டும் சகித்துக் கொண்டும்
வாழும் பிணங்கள் பூமியடா இது!

போலியான சிரிப்பு
கேலியான பேச்சு பேசி
ஆளை மயக்கி - ஆழமான
ஆணியை இறக்கும்
நாய்கள் ஓலமிடும் சுடுகாடடா இது!

உயிறை உறிஞ்சி உள்ளே
வைத்துக் கொண்டு - பண்பு
பயிரை வளர்க்கப் பாடுபடுவதாய்
கூறும் வேட்டை நாய்களின்
விளையாட்டு மைதானமடா இது!

சிந்திய ரத்தத்தின்
சில துளியையும்
நக்கி திங்க நாயாய் அலையும்
நயவஞ்சக கூட்டமடா இது!

தட்டிக் கொடுத்தும்
தடைப் போட்டும் - பலவித
நாடகங்கள் அறங்கேறும்
அழுக்குப் படிந்த
நாடக மேடை தான் இந்த பூமி!

இதில் இனியொரு பிறவி வேண்டாமடா சாமி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக