புதன், 23 ஜூன், 2010

சுவாசிப்போமா சுதந்திர மூச்சு- ஈழம் 037

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in





ஓடி திரிந்தோம் பாடி ரசித்தோம்!

ஒய்யாரமாய் வாழ்ந்தோம்!

இயற்கை அழகை கண்டு இன்புற்றோம்!

இடி மழையில் ஆடி பாடினோம்!

மலை உச்சியில் மேக கூட்டம்

ஊதி விளையாடினோம்!

உற்றார் உறவினருடன் உண்டு மகிழ்ந்தோம்!

கடவுளே கைவிட்டார் போல்

கானல் நீராய் வாழ்க்கையைத் தொலைத்தோம்!

குண்டு மழையில் குளித்தோம்!

ரத்தச் சகதியில் நனைந்தோம்!

முகம் பொத்தி இருட்டில் அலைந்தோம்!

விடியாத வானத்தை எட்டி ஏமாந்தோம்!

நிலா ஒளியில் உறவைத் தேடினோம்!

நிற்கதியில்லா வாழ்வைக் கண்டோம்!

ஒளியில்லா முகம் கண்டு வாடினோம்!

தேதியில்லா தினங்களைக் கழித்தோம்!

பசிக்கும் குழந்தை முகம் பார்த்து பதறினோம்!

வழியில்லா வாழ்க்கையைத் தேடினோம்!

யுகங்கள் கழித்து வாழ்கிறோம்!

சுவாசிக்க சுதந்திர மூச்சு தேடி நிற்கிறோம்!





பெயர் : காயத்ரி

வேலை: ஜுனியர் அசோஸியேட்.

ஆரோஸியண்ட் அவுட் ஸோர்சிங்க் லிமிடெட்

நம்பர் 3, சம்பந்தமூர்த்தி தெரு,

மதுரை- 625001

கைபேசி: 9092335907

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக