வெள்ளி, 25 ஜூன், 2010

பெண்ணுக்குள் பூகம்பம்..! 043

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in


ஐம்பது பவுன் நகையும்
ஐந்து லட்சமும் கொடுத்து
ஊருக்கெல்லாம் சோறு போட்டு!

இருபத்தைந்து வயது வாலிபரை
விலைக்கு வாங்கி- அவனுக்கும்
அவன் குடும்பத்துக்கும் சேவைசெய்யும்
பெண்ணுக்கு மணவாழ்க்கை

இப்படிதான்! -அவனுக்கோ
சம்பளமில்லா சமையல்காரி
கிடைத்துவிட்ட சந்தோசம்!

வீட்டு வேலைகளை அவள்
தலையில் ஒப்படைத்துவிட்டு
வீராப்பு பேசும் வீணர்கள் கூட்டம்!

இவளுக்கு மந்திரம் சொல்லும்
மாயக்காரி என்ற பெயரும் உண்டு!

பிறந்ததிலிருந்து படும் துன்பம்
தான் எத்தனை எத்தனை!

ஆராய்ந்து பார்க்காமல் செய்யும்-இந்த
செயலால் தூக்கத்தில் ஏக்கத்தைச்
சுமக்கும் இளம் பெண்களின்
உள்ளத்தில் தினம் தினம்
பூகம்பம் வெடித்து கொண்டே
தான் இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக