திங்கள், 14 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...!.

---------- Forwarded message ----------
From: s.asli s.m.safeer <safeerasli@gmail.com>
Date: 2010/6/14
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்...!.
To: admin@sivastar.net


மந்திரக் காரர்கள்
தந்திரத்தால்-எம்
தாய் நாட்டை
தனக்கென உரிமையாக்க
தந்த இன்னல்கள் போதும்.

நான்கு வயதென்ன
நாற்பது வயதென்ன
குழந்தையென்ன
குமரியென்ன ஈவு இரக்கமின்றி
குண்டை மட்டுமே வீசினார்கள்.

மாற்றுவதற்கு துணியில்லை,
மடிசாய உறவுகளில்லை
மாட்டில் கொட்டில்களாய்
ஆனோம் அநாதைகளாய்.

நீரும் சுத்தமாக இல்லை
நிம்மதியும் சுதந்திரமாக இல்லை
முப்படைகளையும் தாண்டி
மூச்சுத் திணற வைத்த-இந்த
முப்பது ஆண்டுகளும்
போதுமடா-இப்படி
இனி ஒரு பிறவி வேண்டாமடா....!

எஸ்.அஸ்லி.
இலங்கையிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக