வெள்ளி, 25 ஜூன், 2010

ஈழம் என்று மலரும்? 039

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in



ஈழம் என்று மலரும்

எண்ணங்கள் ஆயிரம்

ஏக்கத்துடன் காத்திருக்கின்றன நீ மலர!............

மனங்கள் மாறலாம்

மதங்கள் மாறுமா?

இடங்கள் மாறலாம்

இனங்கள் மாறுமா?

காலங்கள் மாறலாம்

கலவரங்கள் மாறுமா?

சாஸ்திரங்கள் மாறலாம்

சாதிகள் மாறுமா?

உணர்ச்சி என்ற பேயும்

உறங்க போவதில்லை!

சாமி மறைந்தாலும்

சாதி மறைவதில்லை!

எத்தனை எத்தனை

ரத்தத்தை ருசி பார்க்கும் இந்த பூமி!

எத்தனை எத்தனை

உயிர்களைப் பழிவாங்கும் இந்த பூமி!

பூமி மாறுமோ

வெறி தான் தீருமோ?

என்ன சொல்ல நான்

விதி ஆடும் ஆட்டத்தை!

கடவுள் இல்லையோ?

கருணை இல்லையோ?

கண்ணின் மணிகளைக்

காக்கவில்லையோ?

அன்பு என்னும் அம்பு

அதையும் தூக்கிக் கொள்ளு

உண்மை நிலையை எடுத்து

உலகை நீயும் வெல்லு!

எண்ணங்கள் ஆயிரம்

ஏக்கத்துடன் காத்திருக்கின்றன நீ மலர!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக