திங்கள், 14 ஜூன், 2010

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/12
Subject: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!
To: admin@eegarai.net

அன்னை கருவில்
அழகான வாழ்வு
அகிலம் கண்டும்
ஆனந்தம் கொண்டு

மனிதப்பிறவியாய்
மண்ணில் ஆர்ப்பரித்து
மனிதனாய் வாழ
மறுக்கின்ற உலகம்

செய்த பிழை எதுவென்று
சொல்லாது தளம்பறித்து
சிசுவாய் இருந்தாலும்
சிதைத்து சுகம் கண்டு

ஓடு மட்டும் துரத்தி
ஓட்டாண்டியாக்கி
ஒய்யாரமாய் படம் போட்டு
ஒப்பாரியில் வாழ்கிறார்கள்

எல்லார் வாழ்விலும்
எட்டப்பர்களாய்
எட்டி உதைத்து
எரித்துப் போட்ட சுதந்திரம்

அங்குமிங்குமாய்
அலைமோதும் அகதியாய்
அல்லல் படுத்தும்
அறிவு கெட்ட உலகம்

சுதந்திரம் என்ற சுவாசம்
அடைந்து பெற்றவர்களும்
அதனை அளிக்க மறுத்த
ஆட்சியாளர்களாய்....

மரத்துப்போன வாழ்வுடன்
மடிந்தொழிந்து போகுமுன்
மனிதன் என்றாவது
மறதியிலாவது நினைப்பார்களா?

இருக்குமட்டும் இருந்து
இறுதி மூச்சு வரை
சுதந்திரமாய் மூச்சுவிட
சுதந்திரம்தான் தருவார்களா?

நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக