வெள்ளி, 2 ஜூலை, 2010

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு -ஈழம்.. ! 061

---------- Forwarded message ----------
From: kanagalingam Rama <kanagalingamm@hotmail.com>
Date: 2010/7/2
Subject: கவிதைப்போட்டி (சுவாசிப்போமா சுதந்திர மூச்சு -ஈழம்)
To: admin@sivastar.net




பொன்னேர்மொழி கல்லும் மாபுழுதிதோன்றிக்
கொள்ளாத் தொல்காலத்தே தோற்றிச்சீர்கொள்
தென்னார் வளர் தமிழம் சொன்னார்யாரோ -தமிழ்
சொல்லச்சிரம் மேனியதுபிறிதென்றாக்கும்
வல்லார்கொடுவாளை வளைத்தே நீதி
வளையாது குலம்காக்கத் தலையெடுத்து
புல்லாகிப் பூண்டாய் மரமேயாகப்
பொழுதோறும்கிளைவிட்டுப் பரந்தேவளர்ந்து
புகழ்பாடு நானூற்றுப் புறத்தேதானும்
சொல்லாக் கடுந்தோளின் பொலிவைக்கொண்டு
புயல்வீசும் களமாக்கிப்பொழுதில்மீளும்
தன்நேர்நிகரற்ற தமிழன்நடுவே
தழைத்த சில புல்லுருவித் தடைகளாலே
இன்னாரென் றினம்காட்டி இகமேசூழ
எரிநஞ்சுவெடிகொண்டு இனமேகொன்று
மண்ணாளப்பிறந்தவரை மரணம்ஆளப்
பண்ணியபின் பலநூறாய் வகுத்தேவேலி
முள்போட்டு அடைத்த மாகொடுமைதன்னை
முழுதாகக் கேளாமல் உலகம்யாவும்
சொல்லால் விளையாடிச் செய்வதேது
செயலால்வெறும் ஆமைகதி கொள்வாராயின்
சொல்லரிய இனமழிந்து போதல்அன்றி
சுவாசிப்போமா சுதந்திரமூச்சு -ஈழம்?

கிரிகாசன் kirikasan


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக