From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/16
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்
To: admin@sivastar.net
இனி ஒரு பிறவி வேண்டாம்
என் தாயின்
மார்பகங்களில் ஒன்று
குண்டடி பட்டு
குருதி வடிய வடிய
சதைக்குவியலாய்
பிய்ந்து தொங்குவதை
காண நேர்ந்தது.
தந்தையின் தலையை
கையிலெடுத்துக்கொண்டு
பிணக்குவியலுக்குள்
உடல்தேடியலைந்த
கொடுமை நிகழ்ந்தது
பல நாட்களாய்
உணவே உட்கொள்ளாமல்
வயிற்றுப் பசியால்
வாடி வதங்கிப்போயிருந்த
இளந்தளிர் தங்கையை
சிலர் தங்களது காமப்பசிக்கு
பயன்படுத்திக்கொண்டபோது
எழுந்த அலறலின் அதிர்வுகள்
என் காதில் விழுந்தது
வேறொரு முள்வேலி முகாமிற்குள்
இன்னும் உயிருடன் இருப்பதாய்
அறியப்படுகிற இளம்மனைவி
பற்றிய பய உணர்வுகள்
நொடிக்கொரு முறை எழுந்தது.
வாழ்ந்துக்கொண்டே செத்து. . .
செத்துக்கொண்டே வாழ்ந்து. . .
ஐயோ…! ஐயையோ!
ஏழு பிறவியில்
அனுபவிக்கவேண்டிய
கொடுமைகளையெல்லாம்
ஒட்டுமொத்தமாய் ஒரே பிறவியில்
திணித்துவிட்ட காலமே!
இனி ஒரு பிறவி வேண்டாம்
-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008.
--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக