செவ்வாய், 13 ஜூலை, 2010

தொலைதூரக் காதல்! 080

---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/12
Subject: கவிதைப்போட்டி-3
To: admin@sivastar.net

தொலைதூர காதல்.

கண்மணியே!..
கை நிறைய காசு சம்பாரிக்கலாம்!..
வளமாய் வாழலாம்..என நினைத்து
ஐந்து வட்டி, பத்து வட்டி என பார்க்காமல்..
கடன் வாங்கிக்கொண்டு..
கடல் தாண்டி வந்தேன்..உன்னை பிரிந்து..

ஆனால்..
"நேசத்தின் மகத்துவம்"எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை"
என்பதை அறிந்தேன்..நீ என் அருகில் இல்லாதபோது..

இங்கு..நான் மட்டும் தனிமரமாய்..
நாள்தோறும் இருக்கிறேன்.. – தினம்
தொலைபேசி வாழ்க்கை வாழ்கிறேன்..-உன்னோடு..

இரைச்சிலிடும் மெசின்கள்..
சப்தமிடும் வாகனங்கள்..
அதிரவைக்கும் கிரேன்கள்..
தீப்பொறி கக்கும் கிரைண்டர்கள்..
ஒளியை கக்கும் எலேக்ட்ரோடுகள்..
அனலாய் கொதிக்கும் அணு உலைகள்..
இவற்றுக்கிடையே நான் இருந்தபோதும்..
என் மனதில் தென்றலாய்..மெல்லிசையாய்.
உன் நினைவுகள்...

இதுவாய் வாழ்க்கை...
பணம் சேர்த்தால் வளமாய் வாழலாம்..என
நினைத்து..தினம்..தினம் ..பிணமாய்
வாழ்கிறேன்..

இதுவாய் சந்தோஷம்!...

அன்று..தினம் ஒருவேளை உணவாக..

உன் கையால் வெறும் சாதம் மட்டும்

உண்டபோது அமிர்தமானது..

இன்று...
(சொல்ல வார்த்தை வரவில்லை..)

"போதுமடி.. இந்த வாழ்க்கை"

புறப்படுகிறேன்..நாளையடி"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக