புதன், 14 ஜூலை, 2010

தொலைதூரக் காதல்! 091

---------- Forwarded message ----------
From: ArulPrakasan Palanisamy <actionarul@gmail.com>
Date: 2010/7/15
Subject: 4. தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net




தொலைதூரக் காதல்!

கதைக்க ஆரம்பித்தோம்
கணக்கில்லாமல் ,
நட்பானோம் ஒப்பந்தம் போடாமலே
நாளுக்கு நாள் ,
பார்க்காமலேயே பார்த்து பழகுபவர்களை விட
பல மடங்கு பழகினோம்,

என் சிறு சிறு பொய்களுக்கெல்லாம்
ஏங்கினாய் ,அவையெல்லாம் பொய்யாக பொய்த்து போகவே
வேண்டுமென சில சமயம்
வேண்டினாய் கடவுளிடம்
நான் சொன்ன அனைத்தும் உண்மையாக இருக்குமோ என அஞ்சி ,
நானும் நீயும் மணமொத்த நிலையிலிருந்த பொழுது
நம்மை யாராலும் பிரிக்க முடியாதென மார் தட்டினேன்
நமக்கு மட்டுமே தெரியும் படி .
நீ எதிர் பார்த்த தருணங்களில்
ஏன் என் அன்பை வெளிபடுத்த முடியாமல் புழுங்கி தவித்தேன்
என்பது உனக்கு தெரியும் .

சரி என மீண்டும் நட்பாகவே தொடர்ந்தோம்,சில காலம் கழித்து
சொந்தமாகலாம் என நினைத்து
சொன்னேன் என் விருப்பத்தை
தொலை தூர கல்வியில் படித்து தேர்வு பெறுவது போல என்
தொலைதூர காதலிலும் வெற்றி பெறலாம் என எண்ணி,
எதிர்பாரா முடிவை தந்தாய்
எதிர் பார்த்த தருணத்தில் முடியாதென

- ஜோ (எ) ப.அருள் பிரகாசன்

Name :P.Arulprakasan
Address : 4A,F2,SS Enclave, Dandeeswaran Main Street, Velacheri,Chennai-42.
Email id : actionarul@gmail.com
Monile : 9894847853


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக