செவ்வாய், 13 ஜூலை, 2010

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 084

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/7/13
Subject: போட்டிக் கவிதை : அடங்கிவாழும் பெண்ணினம் ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்
To: eegaraipoem <admin@sivastar.net>


அடங்கிவாழும் பெண்ணினம் ஆர்ப்பரிக்கும் ஆண்குணம் !

கள்ளிப்பாலுக்குக்
கரைந்தது போக
மீதம்தான்
நாங்கள்.. !

வக்கிரப்
பார்வைகளுக்கு
மத்தியில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
வயதிற்கு வந்த
பொம்மைகள்.. !

உங்கள்
வட்டத்திற்குள்
வைப்பதற்கு
கோலிக் குண்டுகளோ
கோழிக் குஞ்சுகளோ
அல்ல நாங்கள்... !

போட்டிக்கு
வந்துவிடுவோமென்று
பூட்டி வைத்தே
பழகிவிட்டீர்கள்
'பொட்டச்சி'
தானென்று
பட்டமும்
பதிந்தீர்கள்

நிரயாசைகளுக்கென்று
நிர்பந்திக்கப்படவர்கள்..
நிர்கதியே எங்கள்
நிலைமை,
நித்திரை கூடச்
சொந்தமில்லை
காரணம்
முத்திரை
பதிக்கப்பட்ட்டவர்கள்
நாங்கள்
பெண்களென்று.. !


எங்கள்
வளைவிலும்
சேலை நெளிவிலும்
தொலைந்து போனவர்களே
சற்றேனும்
தேடியெடுங்கள்
புதைந்துபோன
உங்கள் மனசாட்சியில்
ஏதேனும்
மீதமிருந்தால்.. !

- நியாஸ்



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக