வியாழன், 15 ஜூலை, 2010

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 103

---------- Forwarded message ----------
From: vetri selvi <kavivetri.90@gmail.com>
Date: 2010/7/16
Subject: kavithai potti
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்
ஆர்ப்பரிக்கும் ஆண் குணம்
முடங்கிப் போகும் வெகுவிரைவில்
அடக்கம் செய்வோம் புதைகுழியில்.
ஆணும் பெண்ணும் நிகராக
வானும் மண்ணும் வலம்வருவோம்
உணர்வும் உரிமையும் ஒன்றென்று
உணரட்டும் ஆணினம் என்றென்றும்
பெண்ணின் திறமைகள் உரமாகும்
புரிந்தால் பெண்ணினம் வரமாகும்
பெண்ணைப் போற்றும் சமுதாயம்
ஏற்றம் பெறுவது சத்தியமே
பெண்ணை சமமாய் பாவித்தால்
முன்னேற்றம் உலகில் சாத்தியமே!


கவி . வெற்றிச்செல்வி சண்முகம்,

கடலூர் .

கல்வித்தகுதி :முதுகலை அறிவியல்
பணி :முதுகலை ஆசிரியர்
முகவரி :46 ராஜகவி நகர்
கொண்டூர் அஞ்சல்
கடலூர் 2

ஆர்வம் :கவிதை, கட்டுரை , பட்டிமன்றம்


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக