வியாழன், 15 ஜூலை, 2010

ஈகரைத்தாய்! 099

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/7/15
Subject: கவிதைப் போட்டி : ஈகரைத்தாய்
To: eegaraipoem <admin@sivastar.net>


பாசத்தொட்டில்
கட்டி
ஆட்டுகிறாய்
இவ்வுலகெலாம்
கூட்டி
தாயே !

இப்பாரினில்
உன் பேரினில் காண்
எம்
தோழமைக் கூட்டம்

கட்டிய கைகளும்
பூட்டிய கண்களும்
என்றோம்
பின் சென்றோம்
நீ
காட்டிய பாதையில்
வென்றோம்
இன்று

பகிர்வும் பாசமும்
பெற்றோம்
சுற்றமும்
இங்கு
கற்றோம்
நற்காதலும்
கனிவும்

உன்னிசையறி
வந்தோம்
விசையறு
வீழ்ந்தோம்
எட்டுத்
திசையறிவித்தோம்

நின்றன்
நிலையது நினைந்து
நித்திரையிழந்து
நித்தம்
பித்தம்
பிடித்தே
நின் பாதம்
பணிகிறேன்
உனை
உயிரென
அணிகிறேன்.. !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக