செவ்வாய், 6 ஜூலை, 2010

தொலைதூரக் காதல்! 070

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 6 July 2010 13:55
Subject: kavithaikal
To: admin@sivastar.net



காதலனே!

நீ இல்லாத நேரம்
காலங்கள் கூட
கால்கள் இல்லாது
வேகமாய் நடக்கிறது!

நீ நடத்தும்
நாடகத்தினால்
நிஜங்கள் கூட
நிழலாய் தொ¢கிறது!

உன் நினைவில்
வாழுவதால் தான்
வருடங்கள் கூட
காற்றாய் பறந்து விடுகிறது!

நிஜத்தில் வருவாயா
என நினைத்தால்
கானல் நீர் கூட
கருங்கடலாய் தொ¢கிறது!

கண்ணீருக்குத் தோழியாய்
மாற்றி சென்றவனே!
கல்லறைக்கு வழி
சொல்ல மறந்தவனே!

தினம் தினம்
சாகிறேனடா உன்னால்!

உன்னால் தான்
எரிக்கப்படாத
பிணம் ஒன்று
மலர்கள் இல்லாது
தினம் தினம்
தெருக்களில் ஊர்வலம்
நடத்துகிறது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக