புதன், 14 ஜூலை, 2010

சுவாசிப்போமா சுதந்திர மூச்சு? - ஈழம்! 090

---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/13
Subject: கவிதைப் போட்டி எண்-3
To: admin@sivastar.net

நண்பனே! இது..
மண்ணில் நம் கொடி நிற்க..
மரணத்தை மகிழ்வோடு தழுவிய
மைந்தர்கள் பிறந்த நாடு!..

நண்பனே! இது..
தேசம் காக்கச் சென்று..தன்
தேகம் காக்க மறந்து போன..
தேசத்தியாகிகள் பிறந்த நாடு!..

நண்பனே! இது..
தோலால் செய்யப்பட்ட உடலை
துச்சமென நினைத்து..
துப்பாக்கித் தோட்டாக்களுக்கு ..
துணிவோடு கொடுத்த
துளிர்கள் பிறந்த நாடு!..

நண்பனே! இது..
மண்ணில் மனித உரிமை
மரம் போல் வளர்ந்து நிற்க..நம்
மண்ணுக்குள் உரமாகி போன ..
மகாத்மாக்கள் பிறந்த நாடு!..

இது தெரிந்தும் ..
ஏன் எந்த தயக்கம்?..
ஏன் இந்த கோழைத்தனம்?.

இந்த..
இரக்கமற்ற ..மனிதர்களை..
இரத்த வெறிகொண்ட மிருங்கங்களை..
அழிக்காமல்...எப்போது நாம் சுவாசிப்போம் !
சுதந்திர மூச்சு? இறங்கி வா இப்போதே..

நண்பனே!
முயற்சிப்போம்..மகாத்மா போல் உயிரை கொடுத்து
சுதந்திரம் பெற.. இல்லையேல்.. இரக்கமற்ற ..
மனிதர்களின்..உயிரை எடுத்து
சுதந்திரம் பெறுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக