வியாழன், 15 ஜூலை, 2010

பிரியாத வரமொன்று வேண்டும்! 097

---------- Forwarded message ----------
From: Annasamy.V <vas@lntecc.com>
Date: 2010/7/15
Subject: போட்டிக் கவிதை
To: "admin@sivastar.net" <admin@sivastar.net>

பிரியாத வரமொன்று வேண்டும்

மண்ணில் பிறக்க கட்டளை இட்டீர்.
கண்ணில் வழியும் நீரினை கனிவாய்த்
துடைக்க ஓரினிய உறவைக் கொடுத்தீர்.
இடைவிடா துன்னையும் கண்டேனே.

அன்னை காட்டும் பரிவில் மறந்தேன்
என்னை. பெறும் அந்த இன்பம்
பன்மடங் காகிட தந்தையென ஒருவரையும்
முன்னறி தெய்வமாய்ப் பெற்றேனே.

இருவரின் ஈடிலா அன்பினை விளக்க
ஒருபதம் நீயே கூறுவாய்! உருகிட
ஓர்தாய், தாரளமாய் தரவோர் தந்தை;
பேரின்ப, பெருமைகொள் நாட்களே.

உணவு, கல்வியென எனது தேவைகளை
உணர்ந்த மனதோடு என்றும் இணக்கமாய்
விளங்கும் இவர்களை ஒருபோதும் பிரிக்காதே.
அளித்தவரே பறிப்பது முறையோ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக