வெள்ளி, 2 ஜூலை, 2010

ஈழம் என்று மலரும் ! கவிதைப்போட்டி எண் 063

---------- Forwarded message ----------
From: Selvakarthi N <selvakarthi@gmail.com>
Date: 2010/7/2
Subject: கவிதைப்போட்டி - ஈழம் என்று மலரும்
To: admin@sivastar.net


ஈழம் என்று மலரும் !

உடைந்து போன மனங்கள் ;
தொலைந்து போன சொந்தங்கள்;
உலகமே கைகட்டி
வேடிக்கை பார்ப்பது போலிருந்தது
எம்மக்கள் கொல்லப்பட்ட போது.

உயிருக்கு பயந்து எதிரியிடமே
எதிரிகளாய் அடைக்கலம் போனோர் சிலர்
உயிரைத் துச்சமாய் எண்ணி
போராடி மரணபட்டோர் பலர்

எல்லோரையும் கொன்றுவிட்டு
யுத்தம் வெற்றி கொண்டதாய்;
சந்தோசப் பட்டு என்ன பயன்.

நாய்களும் மாடுகளும்
உலவும் நாட்டை ஆள
உங்களுக்கெல்லாம் ஏன்
அத்தனை ஆசை!

போரில் மாண்டோர்
கல்லறைகள் உடைக்கப்பட்டபோது
கனத்த மனமும் கண்ணீர்விட்டது
என்றாவது ஈழம் மலரும்
என்றேண்ணியோர் கல்லறைகளும்
காணோம் !
அந்தோ !
ஈழம் என்று மலரும் ?

எனது ஈகரை முகவரி karthi.india

நன்றி.
-- Karthi


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக