From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/15
Subject: kavithai pottikkana kavithai
To: admin@sivastar.net
ஈழம் என்று மலரும்
நரித்தனமான நாடுகள்
ஒன்றுசேர்ந்துகொண்டு
வெறித்தனமாக தாக்கிற்று
எம் இனத்தை
ஆகையால்-
அரியணையை தவறவிட்டு
அகதிகளாய் தமிழன்
ஒன்டவந்த பிடாரிகள்
ஊர் பிடாரிகளாயிற்று
பூர்வீக மண்ணில் தமிழனுக்கு
முழு உரிமையும் போயிற்று
தவறிவிழுதலும்
தவறவிடுதலும்
இயல்பானதே!
சுற்றுகின்ற பூமியில்
இரவும் பகலும் போல்
போராட்ட களம் அதில்
வெற்றியும் தோல்வியும்
இயல்பு
தற்காலிக பிறழ்வை
புறம்தள்ளி
விடியலுக்காய் காத்திருக்கும்
தோழர் தோழியரே. .
கிரகணத்தால் சூழும் இருள்
நிரந்திரம் கிடையாது
நமக்கும் நற்காலம் வரும்
பொறுத்திருப்போம் மனம் உடையாது
ஆயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்குப் பின்-
சில இனத்தவருக்கு
தனிநாடு கனவினை
நிறைவேற்றித் தந்திருக்கிற காலம்
வீரியத் தமிழனை
விட்டுவைக்காது…
தமிழனின் கனவு ஈடேறும்
விரைவினில் மலரும் தனி ஈழம்
-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008.
--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக