செவ்வாய், 6 ஜூலை, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்..! 072




---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/7
Subject: Re: இனி ஒரு பிறவி வேண்டாம்-
To: சிவா <admin@eegarai.net>




இனி ஒரு பிறவி வேண்டாம்

சுகமான சுமையாய் சுமந்திருந்து-நீ
சுவாசிக்கின்ற காற்றில் ஒரு பகுதி தந்து..
உந்தன் உடலையும் உயிரையும் உருக்கி...
எந்தன் உடலையும் உயிரையும் உருவாக்கி...- பிறந்த என்னை
பெண்ணென்ன அறிந்ததும் மனம் கலங்காமல்
மண் வீதியில் விட்டேறிந்த என்அன்னையே!..

பெண்மைக்குரிய தாய்மையை..
பொய்மைக்குள் புதைத்துவிட்டு..
வறுமை என்ற கொடுமையை...
வள்ளலாய் வழங்கி சென்றவளே.!-
அரும்புபோல் துளிர்த்த என்னை...சிறு
துரும்பு போல் தூக்கி எறிந்த என்அன்னையே!..

அன்று –காமப்பசியில் நீ யோசிக்க தவறியதால்..
இன்று யாசிக்கிறேன்.. "பிச்சை"என்ற பெயரோடு.
ஆணாக பிறக்காத என்னை ..அரசாங்கம் நடத்தும்
அரசுத்தொட்டிலில் நீயிட்டிருந்தால்..
எச்சில் தொட்டியருகே அமர்ந்து பசிக்காக.,
ஏங்கிக் கொண்டுருக்கமட்டேன்..!-நாய்களோடு..

தாய்ப்பாலையும்..தமிழ்ப்பாலையும் தராதவளே!.-உன்
காமத்துப்பாலால் உண்டான இந்த பெண்பாலை(என்னை)
புறக்கணித்த உனக்கு.. "இனி ஒரு பிறவி வேண்டாம்"


-தேனி"சூர்யா"பாஸ்கரன்.


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக