செவ்வாய், 13 ஜூலை, 2010

தொலைதூரக் காதல்! 082

---------- Forwarded message ----------
From: mohamed sunaith <sunaithnadwi@gmail.com>
Date: 2010/7/13
Subject: தொலைதூரக் காதல்! கவிதைப் போட்டிக்காக
To: admin@sivastar.net



தொலைதூரக் காதல்!


நகன்றும் அசைந்தும் விரட்டியும்
அகலவியலா கொசுத்தொல்லையென
உன் நினைவுகள்

குனிந்து நிமிர்ந்து ஓடி
அனிச்சை செயல்களில் ஆடித் திரிந்தும்
இறுக்கிச் சம்மனமிட்டிருக்கின்றன
உன் நோக்கியான என் நினைவுகள்

இளித்து வருந்தி கடுத்து
தன் கதையளப்பவர்களுக்கெல்லாம்
ரசித்து ருசித்து "ம"; இட்டுக்கொண்டே
உன்னில் கரைந்து கிடக்கிறேன் முழுதுமாய்

கறுத்து மஞ்சனித்து பின் வெளுத்து
வெளியுலகம் வேஷம் பலவேற்றும்
என்னுலகம் மட்டும் இருண்டு நிற்கின்றன
காலம் பல கழிந்தும்

மிதக்குளிரில் நனைந்து கரையும் மாலைப் பொழுதுகளிலும்
வலிய வந்தனைக்கும் நந்தவன மலர் மணங்களிலும்
வெளியிறங்கி உட்கொள்ள நாத் துடிக்கும்
பன்சுவை நொறுக்குத் திண்பண்டங்களிலும்
தும்பிகளின்றி இசைவாகா சிறுவனைப் போல்தான்
ஏற்றமாகவே எல்லாம் கண்ட என்னுலகம்
எனக்கிசைய மறுக்கிறது உன் இல்லாமைகளில்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ






--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக