வியாழன், 15 ஜூலை, 2010

தமிழுக்கு அமுதென்று பேர்...!101

---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/15
Subject: கவிதைப்போட்டி-3
To: admin@sivastar.net


ஆம்!..
தமிழுக்கு அமுதென்று பெயர்தான்..

"தமிழ்" உச்சரிக்கும் போதே.
என் உள்ளம் உற்சாகப் படுகிறது..
"தமிழ்" இதை உணர்ந்து பார்! இதனுள் ஒன்றிப்பார்!
"தமிழ்" ஒரு மொழியல்ல...உலகம்...

ஆதி கால செம்மொழி தமிழ்..முதல்-இன்று
கோவை மக்கள் பேசும் கொங்குத்தமிழ்,
நெல்லை மக்கள் பேசும் நெல்லைத்தமிழ்
மதுரை மக்கள் பேசும் மதுரத்தமிழ்
சென்னை மக்கள் பேசும் சென்னைத்தமிழ்
அது போல..மலேசியத்தமிழ்
இலங்கைத்தமிழ்,சிங்கைத்தமிழ்.
இன்னும்..பல தமிழ்.. தமிழ்..

குழந்தை பேசும் மழலைத்தமிழ்
பள்ளிப்பருவ கொஞ்சுத்தமிழ்
வாலிபவயதில் கவிதைத்தமிழ்.
தமிழ் தெரியாத
மாற்றான் பேசும் பிழைத்தமில்.
அயல்நாட்டு வாகனத்தில்
ஒலிக்கும் அறிவிப்புத்தமிழ்..

கணினியில் தெரியும் அழகுத்தமிழ்.

அன்னியநாட்டு நண்பன் பேசும் கொச்சைத்தமிழ்
இவற்றை எல்லாம் நீ ரசித்து பார்!..

நீயும் சொல்வாய் "தமிழுக்கு அமுதென்று பேர்.."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக