செவ்வாய், 13 ஜூலை, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 081

---------- Forwarded message ----------
From: mohamed sunaith <sunaithnadwi@gmail.com>
Date: 2010/7/13
Subject: பெண்ணுக்குள் பூகம்பம்...! (கவிதைப் போட்டிக்காக)
To: admin@sivastar.net




பெண்ணுக்குள் பூகம்பம்...!


உன் விழிகளேந்திய கண்ணீர் துளிகளை
கழுவித் துடைத்துக்கொள் என்றெல்லாம்
தேற்றுதலிட்டு இன்னுமின்னும் உன் கோழமையை
தட்டித் தூக்கி விட மனம் ஒப்பவில்லை எனக்கு

இதயத்தில் கவிந்த கருமைகளை
உயிரில் புரையோடிய கவலைகளை
உன் விழிக் கண்ணீர் இளக்கி இலகுவாக்குமென்றும்
உன்னை அலசி உன்னதமாக்குமென்றும்
காரியமியலா பித்தர்கள் பிதற்றிக் கொட்டியவையவைகள்.

உன்னியலாமையை இன்னும் இருத்தும் அழுத்தமாய்
எழுந்து பொங்கும் உன் குருதிச் சூட்டினை
நீரிட்ட தணலாய் கீழிறக்கும்
இளஞ்சிவப்புக் குருதியின் ஒரு பகுதியை
உறிஞ்சிக் கண்வழி துப்பும் எதற்கும் லாயக்கற்றதாய்

இன்னும் நீ ஆழ்ந்து தாக்கப்படுவதற்கான உத்திகளை
ஆயுதமற்ற உன் புறத்திலான உத்திரவாதங்களை
எதிராளியின் காதில் இரகசியமிடும்

நின்று துணியும் உன் சாமானியத்தனம் உருவி
உன் வீட்டீசானிமூலையில் உனக்கோரிடமிடும்.

இறுக்கியமர்ந்த நீரின் ஒற்றைத் துளி
உருவில் முத்தாகி மதிப்பில் சொத்தாகி
கூடிப் பன்மடங்கிட்டு நிற்பதைப் போல்தான்
கூடிக் கழித்த ஒற்றைக் கழிவுதானென்றாலும்
நாலாப்புறச் சுவர்களில் நசுங்கிக் கிடந்ததற்காய்
உறுப்புகளேற்று உருவமிட்டு நிற்கும்
உயிர் ஜனனத்தைப் போல்தான்;
உங்களுக்குள் உறைய விடுங்கள் கண்ணீரை
உங்களுயிர் மீறிய உருவம் பூண்டு
உங்களையுமுயர்த்தும் ஒரு நாள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக