வியாழன், 15 ஜூலை, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்! 100

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/7/15
Subject: கவிதைப் போட்டி : பெண்ணுக்குள் பூகம்பம் !
To: eegaraipoem <admin@sivastar.net>
நீ பொழிந்த
அத்தனை
காதலிலும்
இன்னும்
நனைந்துகொண்டு தான்
நான்
காதலா.. !

காரணம் சொல்
என்னவனே
தொலைந்துபோன
நிஜங்கள்
விட்டுச்சென்றது ஏன்
இத்தனை
நினைவுகளை
மட்டுமென்று.. !

இதோ
தெரிந்தே
தொலைக்கிறோம்
நீ என்னையும்
நான் உன்னையும்
உண்மைதான்
வாழ்வளித்தவர்க்காய்
ஒரு
வாழ்நாள் தியாகம்.. !

என்
விழிகள்
சொரியும்
துளிகளில்
கரைந்தே..
எரியும்
உன்
நினைவுகள்.. !

காதல்
மணமேடை
சேர்வதற்கு,
மனக்கொலைகளும்
மானக்கொலைகளும் தான்
விதியெனில்

அத்தனை
உயிர்களும்
வாழட்டும் நம்
இரு
மனங்களின்
மரணத்தில்.. !

புனிதம் செய்தோம்
காதலை
மனிதம் கொண்டு
ஆனால்..
நான்தான்
தோற்றுப்போகிறேன்
மீண்டும் மீண்டும்
இந்த
மௌன பூகம்பத்தில்.. !
- நியாஸ்




--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக