வெள்ளி, 2 ஜூலை, 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...! 062

---------- Forwarded message ----------
From: kanagalingam Rama <kanagalingamm@hotmail.com>
Date: 2010/7/2
Subject: கவிதைபோட்டி பிரியாத வரம் ஒன்று வேண்டும்
To: admin@sivastar.net



பிரியாதவரம் ஒன்றுவேண்டும்


மலர்மீதிருந்து மணம்வேறுசென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீதிருந்து உணர்வென்னும்தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்

அலைமீதிருந்து குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்றபோதும்
கலைமீதுகொண்ட எனதாசைஎன்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தொலைவானிலுள்ள நிலவானதொருநாள்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையானமைந்தர் மனஉறுதியென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

தலைமீது மின்னல் இடியாகிதுன்பம்
ஒருதாகிவிழுகின்றபோதும்
உருவாகுமீழம் எனும்ஆசைநெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

மலையானதொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும்போதும்
உருவாகும் ஈழ எனசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்


கிரிகாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக