திங்கள், 12 ஜூலை, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்..! 079

---------- Forwarded message ----------
From: ravi msravi <msravi05@yahoo.com.my>
Date: 2010/7/12
Subject: கவிதை போட்டி
To: admin@sivastar.net

இனி ஒரு பிறவி வேண்டாம்

அந்நியன் வற்புறுத்தலினால்
சொந்த ஊரை விட்டு
இந்த ஊரில்
சஞ்சி கூலிகளாக
தஞ்சம் புகுந்தவர்கள்
நாங்கள்…

ஆனால்,

கறையானும்
கல்வி பயிலும்
எங்கள் தமிழ்ப்பள்ளியில்
மதிப்பெண்
அதிகமாயிருந்தாலும்

பணியில் கால் பதிப்பது
அவ்வளவு எளிதல்ல…
எங்கள் சோதனைகளையும்
தாள மாட்டாமல்தான்
கோவில்களெல்லாம் தரைமட்டமாகின்றனவோ???

அரசியல் தலைவர்களெல்லாம்
தலைமறைவானதால்
குடும்பத் தலைவர்களுக்கு தான்
சுமை மிகுந்தது

சொந்த நாட்டிலும்
அயல் நாட்டினர் போல்
வாழும் அவல நிலை
மாற்றான் மொழியில்
வல்லமை பெற்றதால் என்னவோ

தமிழனே தமிழ்மொழியை
மதியாத
இந்த பிறவி போதும்
இனி ஒரு பிறவி வேண்டாம். . .


இரவி மது
மலேசியா



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக